Namvazhvu
திருவழிபாட்டு நிகழ்வுப் பொறுப்பாளர், ஆயராக நியமனம்
Thursday, 23 Sep 2021 10:09 am
Namvazhvu

Namvazhvu

திருவழிபாட்டு நிகழ்வுப் பொறுப்பாளர், ஆயராக நியமனம்

திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகளுக்குப் பொறுப்பாளராக செயல்பட்டுவந்த பேரருள்திரு. குய்தோ மரினி  அவர்களை, வட இத்தாலியின் டோட்டோனா மறைமாவட்டத்தின் ஆயராக நம் திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு முதல், திருத்தந்தையின் வழிபாட்டு நிகழ்வுகளுக்கு பொறுப்பாளராகச் செயல்பட்டுவரும் பேரருள்திரு. மரினி அவர்கள், 2019 ஆம் ஆண்டிலிருந்து புனித பேதுரு பசிலிக்காவின் பாப்பிறை இசைக்குழுவின் பொறுப்பாளராகவும் இருந்துவருகிறார்.

இத்தாலியின் ஜெனோவா உயர்மறைமாவட்ட அருள்பணியாளரான இவர், திருஅவைச் சட்டத்திலும், குடிமையியல் சட்டத்திலும் முனைவர் பட்டம் பெற்றுள்ளதுடன், சமூகத்தொடர்பின் உளவியல் என்ற துறையிலும் பட்டம் பெற்றுள்ளார்.

கர்தினால்கள் ஜியோவானி கனேஸ்ட்ரி, டியோனிகி டெட்டாமான்சி, தார்சியோ பெர்ட்டோனே ஆகிய மூவருக்கு தனிப்பட்ட செயலராகப் பணியாற்றியுள்ள புதிய ஆயர் மரினி அவர்கள், வட இத்தாலியின் பல கல்வி நிலையங்களில் கற்பித்துள்ளதுடன், 2007 முதல், திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகளைக் கவனிக்கும் பொறுப்பில் இருந்துவந்துள்ளார்.