Namvazhvu
ஜூன் 24 புனித திருமுழுக்கு யோவான்
Friday, 24 Jun 2022 05:00 am
Namvazhvu

Namvazhvu

புனித திருமுழுக்கு யோவானின் தந்தை செக்கரியா. தாய் எலிசபெத். முதிர்ந்த வயதில் யோவானை பெற்றெடுத்தார். யோவான் இறைவனின் கைவன்மையைப் பெற்று, தனது வாழ்க்கைமுறை, பேச்சு ஆகியவற்றில் தனித்துவம் பெற்றிருந்தார். பாலைவனத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் செய்தார். யோர்தான் ஆற்றில் இயேசுவுக்கு திருமுழுக்கு கொடுத்தார். உடல், உணவு ஆகியவற்றில் எலியாவை பின்பற்றி காட்டுத்தேனை உணவாகவும், ஒட்டகத்தோலை ஆடையாகவும் பயன்படுத்தினார். இஸ்ரயேல் அனைவரும் மீட்பு பெற வேண்டும் என்ற செய்தியை எடுத்துரைத்தார். படைவீரர்களிடம் நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க்குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள் என்றார். தன் மனைவியை விலக்கிவிட்டு ஒன்றுவிட்ட சகோதரனின் மனைவி ஏரோதியாவை மணந்த ஏரோதைக் கண்டித்தபோது, ஏரோது யோவானை கொலை செய்தார்.