Namvazhvu
திருத்தந்தை நம் இறுதி குறிக்கோள் தந்தையின் இடமே
Friday, 12 May 2023 06:14 am
Namvazhvu

Namvazhvu

மே 07 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் இறப்பதற்கு முன்னர் இயேசு வழங்கிய இறுதி உரையை மையமாக வைத்துத் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

தந்தையின் இடமாக இருக்கின்ற இல்லத்தில் நாம் எப்படிச் செல்லவேண்டும் எங்கு செல்லவேண்டும் என விவரிக்கும் இயேசு, தந்தையின் இல்லத்தில் அனைவருக்கும் இடம் உள்ளது, அனைவருக்கும் இடம் ஏற்பாடுச் செய்யவே தான் செல்வதாகவும் உரைக்கிறார். நமக்கு ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும் இயேசு நம்மை விட்டு விலகிச் செல்லவில்லை மாறாக, நம் இறுதி இடத்திற்கான பாதையை திறப்பதற்காகச் செல்கிரார், ஏனெனில் நம் இறுதி குறிக்கோள் தந்தையின் இடமே என எடுத்துரைத்தார்.

உண்மையில் வாழ்வு மற்றும் வாழ்வை அபரிமிதமாகப் பெறவும் நாம் இயேசுவோடு இணைந்து நடைபோடவேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்முடைய பயணம் இயேசுவோடு இணைந்ததாக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.