Namvazhvu
எண்ம தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம்
Friday, 25 Aug 2023 10:44 am
Namvazhvu

Namvazhvu

இன்றைய சூழலில், தனிநபரின் தரவுகள் பாதுகாப்பு என்பது மிகப் பெரிய கேள்விக்குறியே. எண்ம பரிவர்த்தனை வந்தவுடன், நமது வங்கித் தரவுகள், தனிமனிதனின் அடையாள ஆவணத் தரவுகள் என அனைத்துமே பொதுவெளியில் உலாவத் தொடங்கிவிட்டன. நமது தரவுகளைப் பெறும் வங்கிகள், அரசு நிறுவனங்கள், வர்த்தக மையங்கள் அவற்றை முறையாகப் பயன்படுத்துகின்றனவா? பாதுகாக்கின்றனவா? என்பதெல்லாம் பெரிய கேள்விக்குறிதான்.

இத்தனிமனிதத் தரவுகள் எண்ம உபயோகத்திற்குப் பிறகு, எளிதாகப் பல மைல் தூரத்திலிருந்து திருடப்படுவதும் சாத்தியமானதாகி விட்டது. பன்னாட்டு நிறுவனங்கள் பல வர்த்தக ஒப்பந்தங்களுக்காகத் தனி மனிதத் தரவுகளைப் பரிமாறிக்கொள்வதும் நடைமுறையாகி விட்டது. இத்தகைய சூழலில், ஒன்றிய அரசு எண்ம தனிமனிதர் தரவு பாதுகாப்புச் சட்டம் (Digital Personal Data Protection Act)  ஒன்றை அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருக்கிறது.

இச்சட்டம் குறிப்பிடும் சில படிநிலைகளை அறிந்துகொள்வது அவசியம் எனக் கருதுகிறேன்.

ஒரு பக்கம் நமது தரவுகள் மீது நமக்கு உரிமைகள் இருப்பதாக இந்தச் சட்டம் கூறினாலும், தனி மனித நிறுவனக் கருத்துரிமைக்குப் போடப்பட்ட கடிவாளம் இது என்பதை எத்தனை பேர் அறிந்துள்ளோம்? இனி பகிரியில் பகிர்வதில் கவனம் வேண்டும்; கருத்துகளைப் பதிவிடுவதில் அதிகக் கவனம் வேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக ஊடகங்களிலிருந்து நாம் சற்றே விலகியிருப்பதே நல்லதெனக் கருதுகிறேன்.