Namvazhvu
திருத்தந்தையின் முழக்கம் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்
Tuesday, 16 Apr 2024 11:26 am
Namvazhvu

Namvazhvu

அன்னை மரியாவின் தாய்மை என்பது, இறைத்தந்தையின் மென்மையை நாம் எதிர்கொள்வதற்கான மிகச்சரியான, நேரான, எளிமையான பாதை.”

- ஏப்ரல் 8, கிறிஸ்து பிறப்பின் முன்னறிவிப்புப் பெருவிழா சிந்தனை

வாழ்வின் நிறைவை நமக்குத் தருபவர் இயேசுவே என்பதை உணர நாம் அழைக்கப்படுகின்றோம். நம்மைத் தேடும் இயேசுவை நாமும் தேட வேண்டும். அவரைச் சந்திக்க நம்மை அனுமதிக்க வேண்டும். நமது இதயங்களை அவருக்காகத் திறக்க வேண்டும்.”

- ஏப்ரல் 7, ஞாயிறு மூவேளை செப உரை

இயேசு இறந்த பின் வீடுகளில் பயந்து முடங்கிக் கிடந்த சீடர்களைக் காண வந்த இயேசு, வலி மற்றும் துன்பத்தின் அடையாளமாக இருந்த தமது காயங்களைக் காட்டுகின்றார். அவைகள் மன்னிப்பு மற்றும் இரக்கத்தின் வழிகளாக மாறின.”

- ஏப்ரல் 7, ஞாயிறு மறையுரை

கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பின்மீது ஒருபோதும் அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் நமது வாழ்க்கையையும், நாம் வாழ்கின்ற உலகையும் அவரிடம் கையளிப்போம்.”

- ஏப்ரல் 6, திருத்தந்தையின்டுவிட்டர்குறுஞ்செய்தி

துயர்களாலும், அநீதிகளாலும், கடந்தகாலத் தவறுகளாலும் காய வடுக்களைப் பெற்று வாழும் மக்களை அக்கறையுடன் நடத்த வேண்டிய கடமை ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் உள்ளது.”

- ஏப்ரல் 5, கத்தோலிக்கத் திருநிலையினருக்கான செய்தி