Namvazhvu
15 அருளாளர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட திருத்தந்தை ஒப்புதல்!
Friday, 12 Jul 2024 04:42 am
Namvazhvu

Namvazhvu

அருளாளர் கார்லோ அகுதீஸ் உள்பட 15 அருளாளர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படவுள்ள ஒப்புதலை, ஜூலை 1 அன்று திருத்தூது மாளிகையில் கூடிய கர்தினால்கள் அவையின் பொதுக்கூட்டத்தின்போது திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டார். அருளாளர்கள் புனிதர்களாக அறிவிக்கப்பட இருப்பதற்கான காரணங்களை மறு ஆய்வு செய்வதற்கான கூட்டத்தில் அருளாளர் மற்றும் புனிதர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர் கர்தினால் மார்செல்லோ செமெராரோ அவர்கள், அருளாளர்களின் வாழ்க்கை மற்றும் அற்புதங்கள் பற்றிய அறிக்கையை வாசித்தபோது, திருத்தந்தை அதனை ஏற்றுக்கொண்டு தன்னுடைய ஒப்புதலை வழங்கினார். இவ்வருடம் அக்டோபர் 20 அன்று இந்த 14 அருளாளர்களும் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட இருக்கின்றனர். அருளாளர் கார்லோ அகுதீஸ் புனிதராக உயர்த்தப்பட இருக்கும் தினத்தைத் திருப்பீடமானது விரைவில் அறிவிக்க உள்ளது.