Namvazhvu
நம்பிக்கையில் வளரும் வங்காள தேசம்!
Thursday, 25 Jul 2024 11:26 am
Namvazhvu

Namvazhvu

வங்காள தேசத்தில் உள்ள தலத்திரு அவை மிகவும் ஏழ்மையான, மிகக்குறைவான வளங்கள் கொண்டது என்றும், துறவற ஆன்மிக மனம் படைத்த அப்பகுதி கிறிஸ்தவர்கள் மத்தியில் இயேசு சபையினரின் நவதுறவு இல்லம் உருவாக்கப்படுவது கடவுளின் கருணை என்றும் அவ்வில்லத்தின் தந்தை அருள்பணி. ரொசாரியோ கூறியுள்ளார். மேலும், தேவையில் இருக்கும் தலத் திரு அவையினருக்கு உதவும் அமைப்பினரின் உதவியோடு நவதுறவு இல்லம் திறக்கப்பட்டுள்ளதுகிறிஸ்தவர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலும், இஸ்லாமியர்களை அதிக எண்ணிக்கையிலும் கொண்டது வங்காள தேசம். கத்தோலிக்கத் தலத் திரு அவையானது கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் மக்களுக்குச் சேவையாற்றி வருகின்றது.