“அப்பாவி மக்களைப் பாதிக்கக்கூடிய வன்முறைகளுக்கு மரண தண்டனை எந்த வகையிலும் தீர்வாகாது; மரண தண்டனைகள், நீதியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, பழிவாங்கும் உணர்வைத் தூண்டுகின்றன; இது நமது நாகரிக சமூகத்திற்கு ஆபத்தான ஒன்றான விசயமாக மாறுகின்றது. கைதிகளைச் சிறையில் அடைத்து வைக்க பணம் மற்றும் பொருள்களை முதலீடு செய்வதைவிட, சிறைக் கைதிகள் வாழ்வதற்கும், சிறையிலிருந்து வெளியேறி புதிய வாழ்க்கை வாழவும் உண்மையிலேயே அவர்களை மாற்றுவதற்கான வாய்ப்பை அனுமதிப்பதில் மாநிலங்கள் அக்கறை கொள்ள வேண்டும்” என்று ஆகஸ்டு 18 அன்று ‘இறப்பின் கையில் ஒரு கிறிஸ்தவன். தீர்ப்பிடப்பட்டவர்களின் அருகில் எனது பணி’ என்ற எழுத்தாளர் டெல் ரெசினெல்லாவின் புத்தகத்திற்கு எழுதியுள்ள முன்னுரையில் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.