Namvazhvu
நிவாரணப் பணியில் மறைமாவட்டம்!
Thursday, 19 Sep 2024 06:42 am
Namvazhvu

Namvazhvu

தெற்கு ஆந்திர மாநிலத்தில் ஆகஸ்டு 28 முதல் 31 வரை பெய்த கன மழையால் சுமார் 6.44 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலோர மாநிலத்தின் நந்தமுரி தாரக ராமராவ், குண்டூர், கிருஷ்ணா, ஏலூரு, பல்நாடு, பாபட்லா மற்றும் பிரகாசம் மாவட்டங்களில் உள்ள 193 நிவாரண முகாம்களில் சுமார் 42,707 பேர் தங்கியுள்ளனர். 33 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மீட்புப் பணிகளில் கத்தோலிக்க மறைமாவட்டமும் இணைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளாகத் தன்னார்வலர்களாகச் சேவையாற்றி வரும் வலுவான மகளிர் குழுக்களைக் கொண்ட மறைமாவட்டத்தின் ஆரம்ப மதிப்பீட்டின்படி, 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணப் பொருள்கள் அளிக்கப்பட்டன.