Namvazhvu
பசிலிக்கா பங்குத்தந்தையின் வாழ்த்துச் செய்தி விடுதலையை பெற்றுச் செல்ல அன்னையை நாடிவருக!
Thursday, 26 Sep 2024 04:28 am
Namvazhvu

Namvazhvu

தமிழ்நாட்டின் 7-வது பசிலிக்காவாக விளங்கும் கோவை மறைமாவட்டம், கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னையின் வரலாறு 384 ஆண்டுகள் கொண்டதாகும். ‘செபமாலையே நமக்கு நம்பிக்கை’ என்ற வார்த்தைக்கு ஏற்ப அன்னையின் அருள் வரம் பெற்றுச்செல்வோர் ஏராளமானோர்! இது நமது கத்தோலிக்க இறை நம்பிக்கைக்கு மிகப்பெரிய சான்றாகும். இங்கு வருவோர் அனைத்து மதம், மொழி, இனங்களைக் கடந்து, அன்னையைத் தரிசித்து, பூரண நலம் பெற்று, எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை பெற்றுச் செல்வோர் எண்ணிலடங்கா!

இப்பேர்பட்ட நமது செபமாலை அன்னைக்கு வருகின்ற அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி வெகு சிறப்பாக அன்னையின் ஆண்டுப் பெருவிழா கொண்டாடப்பட இருக்கின்றது. இதில் நீங்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு அன்னையின் வழியாக இறை ஆசிரைப் பெற்றுச்செல்ல எம் பங்கு இறைமக்களோடு இணைந்து அழைக்கிறேன்.

அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துகள்!

அருள்பணி. KMC. அருண், பசிலிக்கா அதிபர் மற்றும் பங்குத்தந்தை, கருமத்தம்பட்டி