Namvazhvu
அணுசக்தியும் அமைதிக்கான பணியும்!
Friday, 04 Oct 2024 05:04 am
Namvazhvu

Namvazhvu

பேராயர் காலகர் அனைத்துலக அணுசக்தி அமைப்பின் (IAEA) பொது மாநாட்டில் அணு ஆயுதங்கள் மனிதகுலத்தின் பொதுநலன் மற்றும் ஒவ்வொரு நபரின் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவும் ஒரு கண்ணோட்டத்தில் அணுகப்பட வேண்டியது என்று தெரிவித்தார். மேலும், அணு ஆயுதங்களின் பரவலைத் தடுப்பதற்கும், அமைதியான அணு அறிவியலின் நன்மைகளைப் பரப்புவதற்கும், வளரும் நாடுகளுக்குத் தொழில்நுட்பம் கிடைக்க உதவுவதற்கும், திருப்பீடத்தால் கையொப்பமிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் அனைத்துலக அணுசக்தி அமைப்பின் பங்களிப்பையும் பொறுப்புணர்வையும் எடுத்துரைத்தார். அணுசக்தி தொழில்நுட்பங்களின் பாதுகாப்பான, இடரற்ற மற்றும் அமைதியான பயன்பாட்டிற்கும் திருப்பீடம் தனது ஆதரவை வழங்கும் என்றார்.