Namvazhvu
மதமாற்றம் நடக்கவில்லை!
Friday, 04 Oct 2024 08:39 am
Namvazhvu

Namvazhvu

கும்பகோணம் கீழ் மைக்கேல்பட்டியில் உள்ள புனித திரு இருதய மேல்நிலைப் பள்ளி மாணவி 2022, ஜனவரியில் தற்கொலை செய்துகொண்டதற்கு மதமாற்றம் காரணம் இல்லை என்று மத்திய புலனாய்வுத் துறை (சி.பி..) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்குத் தொடர்பாக 141 பேரிடம் விசாரணை நடத்தியதாகவும், 265 ஆவணங்களைத் தயார் செய்ததாகவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அமலாக்கத்துறை கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி தெரிவித்தது. மதமாற்றம் என்ற குற்றச்சாட்டை ஆதரிக்க எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், இந்தக் குற்றச்சாட்டை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.