Namvazhvu
இந்தியாவிலிருந்து புதிய கர்தினால்!
Friday, 18 Oct 2024 04:52 am
Namvazhvu

Namvazhvu

கேரளாவின் சங்கனாச் சேரி சீரோ-மலபார் உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த பேரருள்தந்தை ஜார்ஜ் ஜேக்கப் கூவாகாட் (51) அவர்கள் கர்தினாலாக உயர்த்தப்பட்டிருக்கிறார். இவர் ஆகஸ்டு 11, 1973 அன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். ஜூலை 24, 2004 அன்று  குருவாகத் திருநிலைப் படுத்தப்பட்டார். தென் கொரியா (2009-2012), ஈரான் (2012-2014) ஆகிய நாடுகளில் தூதரகத்தின் செயலாளர் உள்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் கோஸ்டாரிகா (2014-2018), வெனிசுலா (2018-2020) ஆகிய நாடுகளில் துறவிகளின் ஆலோசகரானார். 2020-ஆம் ஆண்டில் உலகெங்கிலும் திருத்தந்தையின் பயணங்களை ஒருங்கிணைப்பதிலும் நிர்வகிப்பதிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.