Namvazhvu
கொரோனோவிடமிருந்து உலகை உயிர்ப்பிப்பார்!
Friday, 03 Apr 2020 06:03 am
Namvazhvu

Namvazhvu

உலகத்தின் - ஏதோ

ஒரு முகத்தே மட்டுமல்ல

ஒட்டு மொத்தத் தையுமே

உருக்குலைத்து உலா வருகிறான்

கொரோனா! கொடூரன்!

பல்லாயிரம் உயிர்களைக்

காவு வாங்கி

பல கோடி மக்களின்

சாபம் வாங்கினாலும்

தாகம் தணிய வில்லையோ?

கோரத் தாண்டவம் முடிய?

பட்டித் தொட்டி

மட்டு மல்லாது

பலத்த வல்லரசு நாடுகளையே

வாய் பிளக்க வைத்து - சீராக்கும்

வாய்ப்பும் இழக்க வைத்து

வீறு கொண்டு சுழல்பவனின்

நோக்கம் தான் என்னவோ?

எங்கேயும் நடமாட முடியாமல்

எவரோடும்

உறவாட முடியாமல்

முடக்கி வைத்தவனின்

முதன்மை தான் என்னவோ?

மருந்துமில்லை - மருந்திட

அரங்கமுமில்லை.

யாரைக் கேட்பது?

எங்கே சேர்ப்பது?

விடை  இதுவரை இல்லை.

விஞ்ஞான வளர்ச்சிக்கு

வினாவா?

விஞ்ஞான வளர்ச்சியின்

விளைவா?

ஆத்திகம் பேசும் அண்டத்தின்

முடிவா?

நாத்திகம் பேசும் நாசத்தின்

முதலா?

விடை வேண்டாம்

விடியல் தான் வேண்டும்.

உலகின் பாவங்களைப் போக்க

உயிர் தந்து உயிர்த்த

நம் இயேசு

விரைவில் விடுவிப்பார்!

உலகை உயிர்ப்பிப்பார்!

மீண்டும் புதுப்பிப்பார்!

நம்புவோம்! நலம் பெறுவோம்!