No icon

பிலிப்பைன்ஸ் - மரியாவின் பிறப்பு விழா தேசிய விடுமுறையாக...

கத்தோலிக்கத் திருஅவையில் செப்டம்பர் 8 ஆம் நாள் சிறப்பிக்கப்படும், அன்னை மரியாவின் பிறப்பு விழா நாளை, தேசிய விடுமுறையாக அறிவிப்பதற்கு, பிலிப்பைன்ஸ் செனட் அவை இசைவு தெரிவித்துள்ளது.
மே 20 ஆம் தேதி  பிலிப்பைன்ஸ் செனட் அவையில், அதன் உறுப்பினர் ரொடால்போ பாரினாஸ், சமர்ப்பித்த சட்ட வரைவுக்கு, ஒரே மனதாக ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சட்ட வரைவில், அரசுத்தலைவர் ரொட்ரிகோ துத்தர்தே அவர்கள் கையெழுத்திட்டால், இது அந்நாட்டில் தேசிய விடுமுறையாகக் கடைப்பிடிக்கப்படும்.திருஅவையில், டிசம்பர் 8 ஆம் நாள் சிறப்பிக்கப்படும் அன்னை மரியாவின் அமல உற்பவம் விழா, பிலிப்பைன்சில் ஏற்கனவே தேசிய விடுமுறையாக கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. இந்த விடுமுறை நாள், 2017 ஆம் ஆண்டில் அறிவிக்கப் பட்டது. செப்டம்பர் 8 ஆம் தேதி குறித்து, தற்போது செனட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட வரைவுக்கு, அரசுத்தலைவர் இசைவு தெரிவித்தால், பிலிப்பைன்சில் மரியாவின் இரு விழா நாள்கள், தேசிய விடுமுறைகளாக அமையும்.  
அன்னை மரியாவை, பிலிப் பைன்சின் முக்கிய பாதுகாவலராக, 1942 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதியன்று, திருத்தந்தை 12 ஆம் பயஸ் அவர்கள், தனது திருத்தூது அறிக்கை வழியாக அறிவித்தார். 

Comment