No icon

பத்தனம்திட்டா சீரோ - மலங்கரா மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்

இந்தியாவின் பத்தனம்திட்டா சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 07, இவ்வெள்ளியன்று இசைவு தெரிவித்துள்ளார். சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை மாமன்றம், ஞயவாயயேஅவாவைவய சீரோ-மலங்கரா மறைமாவட்டத்தின் ஆயர் யோஹானன் மார் கிறிஸ்சோஸ்தம் (கல்லூர்) அவர்களின் பதவி விலகலை ஏற்று, அம்மறைமாவட்டத்திற்கு, அருள்பணி சாமுவேல் மார் இரேனியோஸ் (காட்டுக்கல்லில்) அவர்களை, புதிய ஆயராகத் தேர்ந்தெடுத்துள்ளது. சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை மாமன்றத்தின் இந்தத் தெரிவுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் இசைவு தெரிவித்துள்ளார் .
 

Comment