No icon

அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஆயிரக்கணக்கானோர் திருமுழுக்கு

அமெரிக்க ஐக்கிய நாட்டு தலத்திரு அவையில் இவ்வாண்டு சிறப்பிக்கப்பட்ட உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்பு வழிபாட்டில் 37,000த்திற்கும் அதிகமானோர் கத்தோலிக்கத் திருஅவையில் இணைந்துள்ளனர் என்று அமெரிக்க ஆயர் பேரவை யின் அறிக்கையொன்று கூறுகிறது.
லாஸ் ஏஞ்செல்ஸ் உயர் மறைமாவட்டத்தில், ஏப்ரல் 20 அன்று சனிக்கிழமை நிகழ்ந்த திரு விழிப்பு வழிபாட்டில், 1,560 பேர் திருமுழுக்குப் பெற்றனர் என்றும், மேலும் 913 பேர் திருமுழுக்குப் பெறுவதற்குரிய தயாரிப்பில் இணைந்துள்ளனர் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது. இதைத் தொடர்ந்து, கால்வெஸ்டன்-ஹூஸ்டன் உயர் மறை
மாவட்டத்தில், 1,512 பேர் திருமுழுக்குப் பெற்றனர்
என்றும், மேலும் 631 பேர் திருமுழுக்குப் பெறு வதற்குரிய தயாரிப்பில் இணைந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
டல்லஸ் மறைமாவட்டத்தில் 1,196 பேர், சியாட்டில் உயர் மறைமாவட்டத்தில் 769 பேர், அட்லாண்டாவில் 645 பேர், வாஷிங்டன் உயர்
மறைமாவட்டத்தில், 455 பேர் என்ற எண்ணிக்கை யில், ஆயிரக்கணக்கானோர் திருமுழுக்குப் பெற்றுள்
ளனர் என்று அமெரிக்க ஆயர் பேரவை அறி வித்துள்ளது. தங்கள் பகுதியில் வாழும் கத்தோலிக் கர்களின் எடுத்துக் காட்டான வாழ்வு, தங்களை, கத்தோலிக்கத் திருஅவையில் இணைய உந்தித் தள்ளியது என்று, திருமுழுக்குப் பெற்றோர்
பலர் கூறியதாக ஆயர் பேரவையின் அறிக்கை கூறுகிறது.
 

Comment