No icon

தேசிய கல்விக்கொள்கை 2019 வரைவை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்

இரண்டு நூற்றாண்டு சமூக நீதிப் போராட்டத்தின் விளைவாக சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் ஏற்படுத்த சிறந்த முயற்சிகளை மேற்கொண்ட மாநிலம் தமிழ்நாடு. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட ’கல்விக் கொள்கை வரைவு உருவாக்கத்திற்கான சில உள்ளீடுகள்’ என்ற ஆவணத்தில் சொல்லப் பட்ட பல கொள்கை முன்மொழிவுகளை தமிழ்நாடு அரசு நிராகரித்தது. தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள ’தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு’ ஆவணத்தில் உள்ள கூறுகள் பலவும் தமிழ்நாடு அரசால் ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டதாகும்.
தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கு எதிரானது. இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை, மானியம் ஆகியவற்றை நிராகரிக்கும் சமூக நீதிக்கு எதிரான, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மாநில அரசிற்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை முற்றிலுமாக மத்திய அரசு பறித்துக் கொள்ளும் பல கூறுகளைக் கொண்டுள்ளது.
இதில் கூறப்பட்டுள்ள மாற்றங்கள் அரசுப் பள்ளி, அரசுக் கல்லூரிகளை மேம்படுத்தி வலுப்படுத்துவதற்குப் பதிலாக
பலவீனப்படுத்திச் சிதைப்பதற்கு வழிவகுக் கும். அரசுக் கல்வி நிறுவனங்கள் மேலும் வலு இழந்து தனியார் நிறுவனங்கள் வலுப் பெறும். மூன்றாவது மொழியை மாணவர் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டாலும் மூன்றாவது மொழி என்பது கட்டாயமாகிறது.
மூன்றாவது ஒரு மொழியைக் கட்டாய மாகக் கற்க குழந்தைகள் பிற பாடங்களுக்குச் செலவு செய்யும் நேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. இது மாணவர்களுக்குக் கூடுதல் சுமையைத் தருவதாக உள்ளது. இது முற்றிலும் அவசியமற்ற சுமை. தாய் மொழி வழியில் கல்வியும் சூழலுக்கும் வேலை உள்ளிட்ட சில தேவைகளுக்கும் ஆங்கிலம் என்ற அடிப்படையில் இரு மொழிக் கொள்கை தமிழ்நாட்டில் பின்பற்றப்படுகிறது. அது தொடரவேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகுத்துத் தந்துள்ள சமத்துவக் கோட்பாட்டிற்கு வலுச்சேர்ப்பதாக தற்போதைய தேசியக் கல்விக் கொள்கை வரைவு அமையவில்லை. ஆசிரியர்கள் பயிற்சியிலும் குழப்பங் களை உருவாக்குவதாகவே இவ்வரையில் உள்ள பரிந்துரைகள் அமைந்துள்ளன.
மாநில அரசின் உரிமைகள், சமூக நீதி, சம வாய்ப்பு ஆகியவற்றுக்கு பாதகம் ஏற்படும் வகையில் அமைந்துள்ள இந்த தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும். இது குறித்து கூடுதல் தெளிவுகளையும், விமர்சனங்களையும் ஆசிரியர், மாணவர், பெற்றோர் மற்றும் கல்வியாளர் அமைப்புகளிடையே தமிழ்நாடு அரசு கோரிப்பெற வேண்டும். அதற்கு அடிப்படையாக, மத்திய அரசு இந்த ஆவணத்தைத் தமிழ் மொழி பெயர்த்துத் தந்து, அதன்பின் விவாதித்துக் கருத்தைத் தெரிவிக்கக் குறைந்தது 6 மாதங்களாவது கால அவகாசம் தர வேண்டும். அவ்வாறு மத்திய அரசு தமிழில் மொழி பெயர்த்துத் தரவும் கருத்துகள் தெரிவிக்கக் கால அவகாசம் நீட்டிக்கவும் மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கையை முன் வைக்க வேண்டும்.
மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறித்துக் கொள்வது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. மக்களாட்சி மாண்பிற்கு உகந்தது அல்ல. சமூக நீதியைப் புறம் தள்ளி வணிகமயத்தை ஊக்குவிக்கும் இக்கல்விக் கொள்கை வரைவில் முன்வைக்கப்பட்டுள்ள மாற்றங்கள் தமிழ்நாடு அரசின் உரிமைகளையும், அதிகாரங்களையும் எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து விவாதிக்க சட்டமன்றச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
கல்வியிலும் சமூகத்திலும் பின்தங்கிய சமூகங்களுக்கு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட 69ரூ இட ஒதுக்கீடு, அதன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை உள்ளிட்ட மாநில மக்கள் நலன் சார்ந்த மாநில அரசின் திட்டங்களுக்கும், பல்கலைக் கழகங்களை ஒழுங்குபடுத்த  மாநில அரசிற்கு உள்ள உரிமைகளுக்கும் எத்தகைய பாதிப்பை இக்கொள்கை வரைவு ஏற்படுத்தும் என்பதை விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கூட்ட வேண்டும். வரும் தலைமுறைகளைப் பாதிக்கும் கல்விக்
கொள்கை என்பதை உணர்ந்து, மாநில உரிமையையும், சமூக நீதியையும் காத்திட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு ஆவணம் வலியுறுத்தும் அபாயமான கூறுகள்:
1.    பள்ளிக் கல்வியில் மிகப்பெரிய மாற்றமாக 5+3+3+4 என்ற அடிப்படையில் 3 வயது முதல் 18 வயது வரை 15 ஆண்டு கால பள்ளிக் கல்வியை இக்கொள்கை வரைவு முன்வைக்கிறது.
2.    தற்போது 5 வயது முடிந்தபின் முதல் வகுப்பில் இருந்துதான் முறையான பள்ளிக் கல்வி தொடங்கு கிறது. இனி மூன்று வயதில் இருந்தே முறையான கல்வி தொடங்கும்.
3.    மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளில் தேசிய அளவிலான கற்றல் திறன் வெளிப்பாடு அடிப்படையிலான தேர்வுகள் நடத்தப்படும்.
4.    ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இடைநிலைக் கல்வியாக கருதப்பட்டு எட்டுபருவத் தேர்வுகள் வாரியத் தேர்வுகளாக நடத்தப்படும்.
5.    ஒன்பதாம் வகுப்பு முதற்கொண்டே தொழிற்கல்வி. எந்தத் தொழில் என்பதை மாணவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
6.    தேர்வுகளை நடத்த அரசு தேர்வு வாரியம் (க்ஷடீஹ) அல்லாமல் அரசு ஏற்பு தந்த எந்த தனியார் வாரியமும் தேர்வுச் சான்று தரலாம்.
7.    மாநில தேர்வு வாரியமா, மத்திய தேர்வு வாரியமா அல்லது தனியார் தேர்வு வாரியமா? எது தன் மாணவர்களை மதிப்பிட்டு சான்று தர வேண்டும் என்பதை பள்ளிகளே முடிவு செய்து கொள்ளலாம்.
8.    பள்ளியில் 15 ஆண்டு பயின்று மேல்நிலைப் பள்ளி கல்விச் சான்று பெற்றாலும் கல்லூரியில் சேர அது தகுதியாகக் கருத மாட்டார்கள்.
9.    தேசியத் தேர்வு முகமை (சூகூஹ) நடத்தும் தேர்விற்கு விண்ணப்பித்து அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில்தான் கல்லூரி சேர்க்கை நடைபெறும்.
10.    தற்போது மருத்துவக் கல்வி பயில ’நீட்’ போன்று பி.ஏ., பி.எஸ்.சி உட்பட எந்தப் படிப்பிற்கும் ஒரு தேசிய தகுதி காண் தேர்வு உண்டு.
11.    மருத்துவக் கல்வியில் நுழைய ’நீட்’, மருத்துவக் கல்வி முடித்த பின்பு ’எக்ஸிட்’ எழுதி அதில் தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவராகப் பணியாற்ற முடியும்.
12.    ஆறு வயதிலிருந்தே மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்க வேண்டும். கூடுதலாக மொழிகளைக் கற்பதற்கே நேரத்தைச் செலவழித்தால் குழந்தைகள் எவ்வாறு பிற பாடங்களைக் கற்க நேரம் ஒதுக்க முடியும்?
13.    பதினைந்து ஆண்டு பள்ளிப் படிப்பில் அனைத்துப் பள்ளிகளிலும் பயிற்று மொழி எதுவாக இருக்கும் என்ற தெளிவு இந்த வரைவில் இல்லை.
14.    அரசுப் பள்ளியில் மாணவர் குறைவு, வசதி பற்றாக்குறை இருந்தால் அத்தகைய பள்ளிகள் இணைந்து வளாக பள்ளிகளாக உருவாகும். வசதி இருப்பவர்கள் அருகிலேயே படிக்க முடியும். வசதி இல்லாமல் அரசுப் பள்ளியை நாடுபவர்கள் தொலைவில் சென்று படிக்க வேண்டும் என்பது சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானது.
15.    கல்வியியல் கல்லூரிகள் மூடப்
பட்டு பல்கலைக் கழகங்களில் நான்கு ஆண்டு படிப்பு படித்
தால் மட்டுமே ஆசிரிய ராகப் பணியாற்ற முடியும்.
16.    ஆசிரியர்கள் பணி அனு பவத்தின் அடிப்படையில் சம்பள உயர்வு, பதவி உயர்வு இனி கிடையாது. தொடர்ந்து நடத்தப்படும் தேர்வுகளில் அவர்களின் திறன் வெளிப்பாட்டின் அடிப்படையிலேயே ஊதிய உயர்வு, பதவி உயர்வு.
17.    பட்டங்கள் இனி பல்கலைக்கழகங்கள் தராது. கல்லூரியே தரும். அதற்கான தகுதிகளைக் கல்லூரி வளர்த்துக் கொள்ளவேண்டும். தவறினால் அத்தகைய கல்லூரிகள் தனக்கு ஏற்பு தந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்து விட வேண்டும். கல்லூரியாகச் செயல்பட்ட கட்டிடம் அதன்பின் நூலகமாகவோ, தொழிற் பயிற்சி நிறுவனமாகவோ செயல்படலாம்.
18.    பள்ளி முதல் கல்லூரி வரை சந்தையில் போட்டி போட்டு தரத்தை நிரூபிக்கவில்லை என்றால் மூடப்பட வேண்டும்.
19.    பல்கலைக்கழகங்கள் 1, 2, 3, 4 என தர வரிசைப் படுத்தப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களாகச் செயல்படும்.
20.    தனியார் - அரசு என்ற பாகுபாடு இருக்காது.
21.    அந்நிய பல்கலைக் கழகங்கள் அனுமதிக்கப் படும்.
22.    தமிழ்நாடு அரசு பின்பற்றும் 69ரூ இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.
23.    மானியம், கல்வி உதவி (ழுசயவே / ளுஉhடிடயசளாiயீ) சமூக, கல்வி பின்தங்கலுக்கு ஏற்றவாறு அமைந்துள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் இருப்பதற்கான உத்திரவாதம் கிடையாது. தகுதி, பொருளாதார அடிப்படையில் மட்டுமே உதவிகள் இருக்கும்.
24.    சமஸ்கிருதம் கற்றலுக்குக் கூடுதல் முக்கியத் துவம் பிற இந்திய மொழி வளர்ச்சிக்கு சம வாய்ப்பு கிடையாது.
25. இந்திய அரசமைப்புச் சட்டம் உத்தரவாதப்படுத்தி யுள்ள மாநில அரசு உரிமைகள்
முற்றிலுமாகப் பறிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டிற் குள் கல்வி முழுமையாகச் செல்லும் கூறுகள் நிறைந்துள் ளன. பிரதமர் தலைமையில் அமைந்த தேசிய கல்வி ஆணையமே முக்கிய முடிவுகளை எடுக்கும் மையமாக இருக்கும்.

Comment