No icon

Fratelli tutti” ஏட்டின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியீடு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், Fratelli tutti” (“அனைவரும் உடன் பிறந்தோர்”) என்ற திருமடலின் தமிழ் மொழிபெயர்ப்பு, அண்மையில்  மார்த்தாண்டத்தில் நடைபெற்ற தமிழக ஆயர் பேரவையின் அரையாண்டு அமர்வின்போது வெளியிடப்பட்டுள்ளது.

அருள்பணி வின்சென்ட் சின்னதுரை அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல், கன்னியாகுமரி மாவட்டத்தின் மார்த்தாண்டத்தில் கூடிய தமிழக ஆயர்களின் கூட்டத்தில், சீரோ மலங்கரா வழிபாட்டுமுறை தலைவர், கர்தினால் பசிலியோஸ் கிளிமீஸ் அவர்களால் வெளியிடப்பட்டது. இதனை டாசோஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக ஆயர் பேரவை கூட்டத்தில், இந்நூல், கர்தினால் கிளிமீஸ் அவர்களால் வெளியிடப்பட, அதன் முதல் பிரதிகளை, தமிழக ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஆன்டனி பாப்புசாமி, மற்றும், சென்னை-மயிலைப் பேராயர் ஜார்ஜ் ஆன்டனிசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Comment