No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்துவே அனைத்து உண்மைகளையும் ஒன்றிணைக்கும் மையம்

அனைத்து உண்மைகளையும் எதார்த்தங்களையும் ஒன்றிணைக்கும் மையமாகவும் எல்லாக் கேள்விகளுக்கான பதிலாகவும் கிறிஸ்து விளங்குகின்றார் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினை திருத்தந்தை பிரான்சிஸ் பதிவு செய்துள்ளார்.

நவம்பர் 19 சனிக்கிழமை, கிறிஸ்துவே எல்லாவற்றின் மையமாக விளங்குகின்றார் என்பதனை எடுத்துரைத்தார். மகிழ்ச்சி, அன்பு, மற்றும் நன்மைத்தனத்திற்கான ஒவ்வொருவரின் இதய விருப்பங்களையும் இயேசு நிறைவேற்றுகின்றார் எனவும், மனித இதயங்களில் நிலையான இருப்பையும் தருகின்றார் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கிறிஸ்துவே அனைத்து உண்மை மற்றும் எதார்த்தங்களின் மையம் எனவும், மனிதரின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலாகவும் விளங்குகின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Comment