No icon

கர்தினால்  ஜார்ஜ் பெல்

முன்னேற்றத்தின் வழிகளைக் காட்டிவர்

81 வயது நிரம்பிய ஆஸ்திரேலிய கர்தினால் ஜார்ஜ் பெல் இடுப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனைகளால் ஜனவரி 19,  செவ்வாயன்று இரவு 9 மணியளவில் உரோமையில் இறைபதம் சேர்ந்தார்.

1941-ஆம் ஆண்டு விக்டோரியாவிலுள்ள பல்லாரட்-இல் பிறந்தார். முதலில் சிட்னியின் பேராயராகவும், அதன் பின்னர் மெல்போர்னின் பேராயராகவும் பணியாற்றிய பிறகு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதியன்று சீர்திருத்தத் திட்டத்தைப் படிக்கவும், திருஅவையை நிர்வகிப்பதில் அவருக்கு உதவவும் கர்தினால்கள் அவையில் சேர அழைக்கப்பட்டார். 2014-ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதியன்று, அவர் பொருளாதாரத்திற்கான புதிதாக உருவாக்கப்பட்டச் செயலகத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட அவர் தொடர்ச்சியான நிதி சீர்திருத்தங்களைத் தொடங்கினார். டிசம்பர் 2018 மற்றும் பிப்ரவரி 2019-இல் இந்த இரண்டு பொறுப்புகளிலிருந்தும் அவர் விலகினார்.

ஆஸ்திரேலியாவில் அவர்மீது சுமத்தப்பட்ட முறைகேடு சம்மந்தமான அவரது விசாரணை மற்றும் சிறைவாழ்வைத் தொடர்ந்து உரோமைக்குத் திரும்பிய பின்னர்,  2021-ஆண்டு, அக்டோபர் 12-ஆம் தேதியன்று, வத்திக்கான் மாளிகையில் திருத்தந்தையால் வரவேற்கப்பட்டார். அந்நிகழ்வின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் பெல் அவர்களின் சான்று வாழ்விற்கு நன்றி கூறினார்.

Comment