No icon

COVID 19- ITALY

வெனிஸ் முதுபெரும்தந்தையின் காணொளிச் செய்தி

நம்பிக்கைக்குரியவரும், நீதிமானுமான புனித யோசேப்பிடம் இறைவன் தனது மிக உன்னதமான கருவூலங்களான இயேசுவையும், மரியாவையும் ஒப்படைத்தார் என்று, வெனிஸ் உயர் மறைமாவட்டத் தின் பேராயரான முதுபெரும்தந்தை, பிரான்செஸ்கோ மொராலியா அவர்கள், ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார். மார்ச் 19, வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட புனித யோசேப்பு திருநாளையும், வெனிஸ் பகுதி மக்கள் சந்தித்துவரும் பெரும் நெருக்கடியான கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தையும் இணைத்து, முதுபெரும்தந்தை மொராலியா அவர்கள், தன் மறைமாவட்ட மக்களுக்கு இக் காணொளிச் செய்தியை வழங்கியுள்ளார்.

புனித யோசேப்பு, மௌனம் காத்த புண்ணியவாளர்

புனித யோசேப்பு, மௌனம் காத்த புண்ணியவாளர் என்பதை இச்செய்தியில் குறிப்பிட்டுப் பேசியுள்ள முதுபெரும்தந்தை மொராலியா அவர்கள், நம்பிக்கை கொண்டோரின் முதல் அடையாளம், இறைவனின் குரலுக்குச் செவிமடுப்பதாகும் என்பதால், அவ்விதம் செவிமடுக்க, ஒருவர் கொண்டிருக்கும் மௌனம் பெரிதும் உதவும் என்று எடுத்துரைத்தார். திருஅவையின் பாதுகாவலரான புனித யோசேப்பு, கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டிருக்கும் இவ்வுலகையும், திருஅவையையும் தன் பரிந்துரையால் பாதுக்காக்க, வேண்டுவோம் என்று, முதுபெரும்தந்தை மொராலியா அவர்கள், இக்காணொளிச் செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.

வெனிஸ் நகர சன்னல்களில் வெள்ளைத்துணி

மார்ச் 19 ஆம் தேதி மாலை 9 மணிக்கு இத்தாலிய திருஅவை முழுவதும் இணைந்து செபமாலை வேண்டும் வேளையில், வெனிஸ் நகரில் இருக்கும் கத்தோலிக்கர், இந்த வேண்டல் முயற்சியில் ஈடுபடுவதன் அடையாளமாக, தங்கள் இல்லங்களின் சன்னல்களில் வெள்ளைத்துணியைக் கட்டிவைக்குமாறு, முதுபெரும்தந்தை மொராலியா கேட்டுக்கொண்டுள்ளார்.

Comment