No icon

திருத்தந்தையின் முழக்கம்

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்

செபம் நமது கோபத்தைத் தணித்து, அன்பை ஆதரித்து, மகிழ்ச்சியை அதிகரித்து, மன்னிக்கும் வலிமையை வளர்த்து நம்மை மாற்றுகின்றது.”

- மார்ச் 18, திருத்தந்தையின் குறுஞ்செய்தி

நாம் பிறருக்குக் கொடுக்கும் போதும், மன்னிக்கும் போதும், கடவுளின் மகிமை நம்மில் பிரகாசிக்கிறது என்பதை நினைவில் கொள்வோம்.”               

- மார்ச் 17, ஞாயிறு மூவேளை செபவுரை

கடவுளுக்கான மாட்சிமை என்பது மனிதர்கள் விரும்பும் வெற்றி, புகழ், அல்லது பகட்டைப் போன்றதோ, பொதுவெளியில் மக்களிடத்தில் தங்களது அதிகாரத்தை வெளிப்படுத்திப் பெறக்கூடிய கைதட்டலோ அல்ல; மாறாக, இறைவனுக்காக நம்மையே அர்ப்பணிப்பது.”                        

- மார்ச் 17, ஞாயிறு மறையுரை

அறிவியலும், நவீன மருத்துவமும் ஒருசிலருக்கு மட்டும் கிடைக்கப்படும் ஒன்றாக மட்டுமன்று; தேவையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கப்பட வேண்டும். மருத்துவமனைப் பணியாளர்கள் தாராள மனத்துடன் அனைவர் மீதும் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.”

- மார்ச் 16, உரோம் தூய குழந்தை இயேசு மருத்துவமனை பொறுப்பாளர்களுக்கான செய்தி

Comment