No icon

பேராயர் வருத்தம்

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக் கல்லூரியில் உள்ள  கருத்தரங்குக் கட்டடத்தில் பல காயங்களுடன் அரை நிர்வாண உடல் கண்டு பிடிக்கப்பட்டது. பயிற்சிப் பெண் மருத்துவர் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை அடுத்து, பணியிடப் பாதுகாப்பைக் கோரி நடைபெற்ற தேசிய அளவிலான மருத்துவ ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். “31 வயதான பயிற்சி மருத்துவருக்கு எதிரானக் கொடூரமான இக்குற்றம் அனைத்துப் பெண்களின் கண்ணியத்தின் மீதான தாக்குதலாகும். விரைவான நீதி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்என்று திருச்சூர் பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் தெரிவித்துள்ளார்.

Comment