No icon

திருத்தந்தை

தவ திருப்பயணம், அன்னை மரியாவிடம் அர்ப்பணிப்பு

 ஜூலை 24, வருகிற ஞாயிறன்று தான் தொடங்கவிருக்கும் கனடா நாட்டுத் திருத்தூதுப் பயணத்தை முன்னிட்டு, ஜூலை 22, வெள்ளி காலையில் உரோம் மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்று அன்னை மரியாவிடம் அத்திருத்தூதுப் பயணத்தை அர்ப்பணித்து திருத்தந்தை பிரான்சிஸ் செபித்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை தொடங்குவதற்கு முன்பும், அதை முடித்துத் திரும்பும்போதும், உரோம் மேரி மேஜர் அன்னை மரியா பெருங்கோவில் சென்று அவ்வன்னையிடம் அப்பயணத்தை அர்ப்பணித்து செபிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்.

அதன் அடிப்படையில், வெள்ளி காலையில் அப்பெருங்கோவிலுக்குச் சென்று, உரோம் நகருக்கு குணமளிக்கும் ளுயடரள ஞடியீரடi அன்னை மரியாவிடம் தனது 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை அர்ப்பணித்துச் செபித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். இப்பயணத்தை, ஒரு தவ திருப்பயணம் என்று திருத்தந்தை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அருள்பணி Diego Faresன் அடக்கச்சடங்கு

மேலும், ஜூலை 21, வியாழன் காலையில், உரோம் இயேசு சபையினரின் தலைமையக ஆலயத்தில் நடைபெற்ற இயேசு சபை அருள்பணி Diego Fares அவர்களின் அடக்கச்சடங்கு திருப்பலியில் பங்குபெற்று, அவரது ஆன்மா நிறையமைதி அடைய திருத்தந்தை பிரான்சிஸ்  செபித்துள்ளார்.

உரோம் இயேசு சபையினரின்  Canisio  இல்லத்தில் உடல்நலம் குன்றியிருந்த, 66 வயது நிரம்பிய அருள்பணி  Diego Fares அவர்கள், ஜூலை 19, செவ்வாயன்று இறைபதம் சேர்ந்தார். நோயினால் துன்புற்ற இவரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 10ம் தேதி அவ்வில்லத்திற்குச் சென்று சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment