No icon

ஹோலோகாஸ்ட்

ஜெருசலேமில் தாக்கப்பட்ட யூத செபக் கூடங்கள்

சனவரி 28 வெள்ளிக்கிழமை இஸ்ரயேல் நாட்டின் மேற்கு கரையில்  உள்ள ஜெனினில் உள்ள யூத செபக்கூடத்திலிருந்து வழிபாடு முடிந்து வெளியே வந்த மக்கள் மீது 21 வயது பாலஸ்தீனியர் நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்ட துயரமான செயலுக்கு வருத்தம் தெரிவித்த ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலர் அந்தோணியோ கூட்டரேஸ் அவர்கள், நாட்டில் வன்முறை அதிகரிப்பது ஆழ்ந்த கவலையைக் கொண்டதாக உள்ளதாகவும் கூறினார்.

இஸ்ரேல் காசா மீது குண்டுவீசி 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஹோலோகாஸ்ட் நினைவு நாளில் நடத்தப்பட்ட இத்தாக்குதல், அண்மை ஆண்டுகளில் நடைபெற்ற நிகழ்வுகளிலேயே மிகவும் தீவிரமான ஒன்றாகவும் கருதப்படுகின்றது.      

Comment