No icon

அருளாளராக உயர்த்தப்பட்ட கர்தினால் எட்துவார்தோ பிரான்சிஸ்கோ பிரோனியோ

டிசம்பர் 16-ஆம் தேதி சனிக்கிழமை அர்ஜெண்டினாவின் தூய லூஜான் அன்னை மரியா திருத்தலத்தில் நிகழ்ந்த திருப்பலியில் கர்தினால் எட்துவார்தோ பிரான்சிஸ்கோ பிரோனியோ அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்டார். அர்ஜெண்டினாவின் ஜூலியோ எனும் சிறு கிராமத்தில் தந்தை ஜோசப், தாய் எரிக்கா என்னும் பெற்றோருக்கு 22-வது மகனாக, 1920-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் நாள் எட்துவார்தோ பிரான்சிஸ்கோ பிரோனியோ பிறந்தார். 1943-இல் குருவாகவும், 1964-ஆம் ஆண்டில் ஆயராகவும் திருப்பொழிவு செய்யப்பட்டு, 1976-ஆம் ஆண்டில் கர்தினாலாக நியமிக்கப்பட்டார். 1984-ஆம் ஆண்டில் திருத்தந்தை தூய இரண்டாம் ஜான்பால் அவர்களால் பொதுநிலையினருக்கான திருப்பீடத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். தனது இறுதி காலத்தில் எலும்பு புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் 1998, பிப்ரவரி 5-ஆம் தேதி தனது 77-வது வயதில் வத்திக்கானில் காலமானார். அர்ஜெண்டினாவின் லூஜான் அன்னை திருத்தலத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 2006 ஜூன் 23-ஆம் தேதி புனிதர் பட்டத்திற்கான மறைமாவட்ட அளவிலான செயல்பாடுகள் உரோம் மறைமாவட்டத்திற்கான திருத்தந்தையின் பிரதிநிதியான கர்தினால் கமிலோ ருயினி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

2022, பிப்ரவரி 18-ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால் பிரோனியோவின் வீரத்துவ நற்பண்புகளை அங்கீகரித்து, அவரை இறை ஊழியராக அறிவித்தார். 2023, நவம்பர் 8-ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால் பிரோனியோவின் பரிந்துரையால் நடந்த ஓர் அற்புதத்தை அங்கீகரித்து, 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் நாள் அருளாளராக அவர் உயர்த்தப்பட வழிவகுத்தார்.

Comment