No icon

ஒருங்கிணைந்த பயணத்தின் இரண்டாம் கட்ட அமர்வு

ஒன்றிப்பு, பங்கேற்பு, செயல்பாடு கொண்ட ஒருங்கிணைந்த திரு அவைஎன்னும் தலைப்பில் ஒருங்கிணைந்த பயணத்திற்கான இரண்டாம் கட்ட அமர்வு 2024, அக்டோபர் 2-ஆம் தேதி  முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் முத்தயாரிப்பாக இதில் பங்கு கொள்ளும் உலக ஆயர் பேரவை உறுப்பினர்களுக்குச் செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய இரண்டு நாள்கள் தியானம் நடைபெற உள்ளது. இதற்குத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்யுமாறு திருத்தந்தை தெரிவித்திருப்பதாக உலக ஆயர் பேரவை தலைமைச் செயலகம் கூறியுள்ளது. மேலும், முதல் கட்ட அமர்வில் வெளியிடப்பட்ட சில கருப்பொருள்களை ஆழமாக ஆராய சில குழுக்களைத் திருத்தந்தை நிறுவி உள்ளதாகவும் அறிவித்துள்ளதுஅண்மையில் 6 புதிய ஆலோசகர்களை உலக ஆயர் பேரவையின் தலைமைச் செயலகத்திற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.        

Comment