No icon

சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லை

சின்னசேலம் சிறுமலர் பள்ளி மீதான தாக்குதல்

புதுவை தூய இதய மரியன்னை சபையைச் சேர்ந்த அருள்சகோதரிகளால் கடந்த 74 ஆண்டுகளாக மிகவும் பின்தங்கிய மாவட்டமான விழுப்புரத்தில் (தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம்) உள்ள ஏழை - எளிய மாணவ மாணவிகள் தரமான கல்வியைப் பெற நடத்தப்படுகிற ஒப்பற்ற பள்ளிதான் சின்னசேலம் சிறுமலர் மேல் நிலைப்பள்ளி. இப்பள்ளியில் ஏறக்குறைய  2150 மாணவ - மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதன் நிர்வாகத்திற்குட்பட்ட விடுதியில் கிராமப்புற, ஏழை மாணவிகள் 117 பேர் தங்கி, இப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 74 ஆண்டுகளில் ஏறக்குறைய 45000 மாணவ - மாணவியர்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டியுள்ள இப்பள்ளி இக்கல்வி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்றது. கல்வி வியபாரமாகிவிட்ட இச்சூழலில் இப்பள்ளியின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது. 
இத்தகைய சிறப்புமிக்க பள்ளியில் மார்ச்  25 ஆம் தேதியைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் மிகுந்த வேதனையும், கவலையும் தரக் கூடியவையாக உள்ளன. 
நடந்தது என்ன?
மார்ச் 25 ஆம் தேதி, பத்தாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு கணிதத் தேர்வு நடைபெற்றது. இப்பள்ளியில் பயிலும் 272 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.  தேர்வுக்குப் பிறகு உள்விடுதி மாணவிகள் விடுதிக்குத் திரும்பினர். கணிதத் தேர்வு கடினமாக இருந்ததால் ஒவ்வொருவரும் தத்தம் சிரமத்தை வருத்தத்துடன் கீழ்தளத்தில் பகிர்ந்து கொண்டனர். பின்னர் இயற்கை அழைப்பை முடித்துக் கொண்டு மதிய உணவிற்கு உணவகம் சென்றனர். விடுதிக் காப்பாளர் செல்வி.ஈஸ்வரி இவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் மாணவி கீர்த்தனாவின் பெற்றோர் விடுதிக் காப்பாளரைச் சந்திக்க வந்ததமையால், அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். மதியம் 1.45 மணியளவில் மாணவிகள் சத்தியா, கீர்த்தனா ஆகிய இருவரும் அடுத்த தேர்வான அறிவியல் தேர்வுக்கு உரிய புத்தகங்களை எடுக்க மேல்தளத்திற்குச் சென்றனர். இருவரும் தங்கள் சக மாணவி பூங்குழலி தூக்கில் தொங்குவதைக் கண்டு பயந்து, நடுங்கி, ஓடி வந்து விடுதிக் காப்பாளர் செல்வி.ஈஸ்வரியிடம் இதனை விளக்கினர். அவரும் முதல் மாடிக்குச் சென்று பூங்குழலியைக் கண்டு அதிர்ச்சியடைந்து, விடுதிப் பொறுப்பாளர் அருட்சகோதரி சகாயம் அவர்களுக்கு செல்போன் வழியாக தகவல் தெரிவித்தார். அருள்சகோதரி சகாயம் தேர்வுக் கண்காணிப்பாளராக தொட்டியத்தில் உள்ள அரசுப் பள்ளிக்குச் சென்று விட்டு இல்லம் திரும்பி கொண்டிருந்தார். கையறு நிலையில் இத்துயரச் செய்தியானது பள்ளித் தலைமையாசிரியை அருள்சகோதரி அமலோற்பவம் அவர்களுக்கும், இல்லத் தலைமைச் சகோதரிக்கும் தெரிவிக்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியை முதல் மாடிக்குச் சென்று பூங்குழலியைப் பார்த்துவிட்டு, உடனடியாக சின்ன சேலம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.  இறந்த மாணவி பூங்குழலியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்க அவர்களின் தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள, எதிர்பாராதவிதமாக அவர்கள் யாருமே செல்போனை எடுக்கவில்லை.  இதற்கிடையில் என்ன நடந்தது என்பதை சகமாணவிகளிடம் விசாரித்தபோது, ‘நான் கணிதத் தேர்வை நன்றாகச் செய்யவில்லை, ஃபெயில் ஆகி விடுவேனோ!? என்று பயமாக உள்ளது, 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் அன்றைய தினம் எனது அக்காவிற்கு திருமணம் நடைபெற உள்ளது, ஒருவேளை நான் தேர்வில் ஃபெயில் ஆகிவிட்டால், எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் பெரிய அவமானமாகிவிடும் அப்பா, அம்மா என்னை கொன்றே போட்டு விடுவார்கள்” என்று பூங்குழலி வருத்தப்பட்டதாகச் சொன்னார்கள். இதற்கிடையில் சின்னசேலம், காவல்துறை உதவி ஆய்வாளர் அவர்களும், அவரைத் தொடர்ந்து சக காவல்துறையினர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர், காவல் துறை ஆய்வாளர் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்தார்கள். தற்கொலை செய்துகொண்ட பூங்குழலியின் சக தோழிகளை அழைத்து விசாரணை செய்தனர். சக மாணவிகள், பூங்குழலி தங்களிடம் கூறியதை காவல்துறை ஆய்வாளரிடமும் கூறினார்கள்.
காவல் உதவி ஆய்வாளர், பூங்குழலியின் பெற்றோருக்குத் தெரிவித்தீர்களா? எனக் கேட்க, அருட்சகோதரி அமலோற்பவம், அவர்கள் தொலைபேசியை எடுக்கவில்லை என்று கூறியதால்,  அவரே அந்த மாணவியின் பெற்றோரை தம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். அப்போதும் அவர்கள் தொலைபேசியை எடுக்கவில்லை. எனவே சின்னசேலம் காவல் உதவி ஆய்வாளர்,  அம்மாணவியின் பெற்றோர் வசிக்கும் பகுதியில் உள்ள ரிஷிவந்தியம் காவல்நிலைய ஆய்வாளரிடம் நிலைமையை விளக்கி, தகவல் தெரிவிக்கும்படி சொன்னார். பெற்றோர் வர தாமதம் ஆனதால் காவல் துறையினர் தாமாக முன்வந்து, பூங்குழலியின் உடலைக் கைப் பற்றி உடற்கூராய்விற்காக விழுப் புரம்- முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த மாணவி பூங்குழலியின் தந்தை திரு. வேம்பன், அன்று மாலை 6.00 மணியளவில் அறுபதுக்கும் மேற்
பட்ட நபர்களோடு வந்து, பள்ளியின் தலைமை நுழை வாயிலை நாங்கள் திறப்பதற்குள் ஏறி குதித்து, பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்தனர்.  நுழைவாயில் பூட்டைத் திறப் பதர்காக வந்த எம்பள்ளி உடற்கல்வி ஆசிரியை திருமதி. ஜெயமணி அவர்களையும்  அருட்சகோதரி பெர்னாவையும் தாக்கி, கீழே தள்ளி, அவர்களின் செல்போன்களைப் பறித்து உடைத்தெறிந்தனர். நிலைமை
கைமீறிச் செல்வதை அறிந்த தலைமை ஆசிரியை அருட் சகோதரி அமலோற்பவம் உடனடி
யாகக் காவல் துறைக்குத் தவவல் கொடுத்தார். உடனடியாக ஆய்
வாளரும் உதவி ஆய்வாளரும் 10க்கும் மேற்பட்ட காவலர்களும் விரைந்து வந்தனர். அவர்களி
டம் பூங்குழலியின் பெற்றோரும்,
உறவினரும் ஏன் தங்களுக்கு உடனடியாக தெரிவிக்க வில்லை? என்றும், தாங்கள் வருவதற்குள் இறந்த உடலை ஏன் அப்புறப்படுத்தினீர்கள்? என்றும் கேட்டனர்.  அதற்கு காவல்துறை உதவி ஆய்வாளர்,
பள்ளி நிர்வாகமும் தாங்களும் பலமுறை வேம்பன் அவர்களின்
செல்போனுக்கு தொடர்பு கொண்டும் அவர் எடுக்காத நிலையில், இனியும் காலதாம தம் செய்தால் உடற் கூராய்வு அறிக்கையில் சிக்கல் நேரும் என்று கருதி,  காவல் துறையின
ராகிய நாங்களே முடிவு செய்து உடலை அப்புறப்படுத்தினோம் என்று விளக்கி, அவர்களை  அரசு மருத்துவமனைக்குச் செல்லும்படி பணித்து, வெளியே அனுப்பிவைத்தார். 
இந்த நிலையில் அன்றிரவு 11.30 மணியளவில், பள்ளிக்குச் சம்பந்தமேயில்லாத சின்னசேலம் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் திரு. குணசேகரனும், அவருடன் திரு. சண்முகம், திரு. பாபு ஆகிய இருவரும்  காவல்துறை உதவி ஆய்வாளரும்,  சிறுமலர் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்திடம் பத்து இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக கொடுக்குமாறு வற்புறுத்தினர்.  அப்போது பள்ளி நிர்வாகம்,  தங்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்றும், அவர்கள் கேட்கும் பணத்தைத் தர இயலாது என்றும் கூறியது.
மீண்டும் மீண்டும் அவர்கள் வற்புறுத்தவே, அம்மாணவியின் பெற்றோருக்கும் அடக்கச் செலவிற் கும்   கருணையின் அடிப்படையில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்
வங்கி வழியாகவே கொடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு பெற்றோர் சார்பாக வந்த திரு. சண்முகம், திரு. பாபு ஆகியோர் தங்களின் பூரண சம்மதத்தைத்  தெரிவித்தனர். பிறகு அவ்விருவரும் கீழ்க்குப்பத்தைச் சார்ந்த திரு. வேல்முருகனிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இச்செய்தியைச் சொல்ல, உடனே கும்பலாக ஐந்து பேர் உள்ளே வந்து, ஆறு இலட்சம் இல்லாமல் இதை ஒத்துக் கொள்ள முடியாது என்று மறுத்தனர்.  ஆறு இலட்சம் கண்டிப்பாக நிர்வாகத்தால் கொடுக்கமுடியாது என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், இத் தொகையை எப்படி வாங்க வேண்டுமென்று எங்களுக்குத் தெரியும்? என்று நிர்வாகத்தையும் அருள்சகோதரிகளையும் மிரட்டிவிட்டு பெரும் கூச்சலுடன் வெளியேறினர்.
அவ்விரவே, பள்ளி நிர்வாகத்தினர் காவல்துறையினரின் பாதுகாப்பு கேட்டு சின்ன சேலம் காவல் நிலையத்தை அணுகினர். அவர்கள் கோரிக்கையை ஏற்று ஐந்து காவலர்களை பள்ளி மற்றும் அருட்சகோதரிகளின் பாதுகாப்பிற்காக அனுப்பி வைத்தனர். ஐந்து காவலர்களும் அடுத்தநாள் (மார்ச் 26) காலை எட்டுமணி வரை பாதுகாப்பு அளித்துவிட்டு, வேறு ஒரு பணி இருப்பதாகச் சொல்லி விட்டு சென்று விட்டனர். 
பூங்குழலியின் இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக 26.03.2019 அன்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. அரசுப் பொதுத்தேர்வு நடைபெற்று வந்த காரணத்தால் 10 ஆம் வகுப்பு மாணவ மாணவியர் மட்டும் தேர்வுக்கு முன்தயாரிப்பிற்காக வரவழைக்கப்பட்டனர். 
காலை சுமார் 9 மணியளவில் 200க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கைகளில் பயங்கரமான மற்றும் கூரான ஆயுதங்களுடன் பள்ளியின் நுழைவாயிலை உடைத்துக் கொண்டு, சுவரின் மீது ஏறி குதித்து உள்ளே வந்தனர். உள்ளே வந்தவர்கள் திட்டமிட்டவாறு கும்பல் கும்பலாகப் பிரிந்து சென்று, பள்ளி, கன்னியர் இல்லம், உள்விடுதி ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தினர். ஒரு கும்பல் பள்ளிப்பணியில் இருந்த தலைமை ஆசிரியை அருட்சகோதரி அமலோற்பவம் அவர்களையும், உடன் பணியாற்றும் இரண்டு ஆசிரியர்கள் திருமதி. ஹேமா, திருமதி. பத்மினி, பெர்னா,  ஆரோக்கியசெல்வி, பென்சி, வினோ ஆரோக்கியம் ஆகிய நான்கு அருட்சகோதரிகளையும்   தேர்விற்காகத் தங்களை தயார்படுத்திக் கொண்டிருந்த பத்தாம் வகுப்பு மாணவ- மாணவிகளையும், அலுவலகப் பணியாளர்களான திருமதி. உஷா, திருமதி. சித்ரா ஆகியோரையும் கொலைவெறியுடன் கருங்கல், செங்கல், கம்பு, அரிவாள், உருட்டுக் கட்டை, இரும்புக் கம்பி போன்ற ஆயுதங்களைக் கொண்டு கடுமையாக தாக்கினர்.  உயிருக்குப் பயந்து  மாணவ- மாணவிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல், மாணவ மாணவிகளின் உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதற்காக அருட்சகோதரிகளும் ஆசிரியர்களும் அவர்களிடம் கெஞ்சினர். அவர்களைத் தடுக்க முயன்றனர். அப்போது அக்கும்பலோடு வந்த பெண்கள் சிலர்,  திட்டமிட்டே, அருட்சகோதரிகளை விளக்கமாற்றால் அடித்து அவமானப்படுத்தினர். சிலர் உருட்டுக்கட்டையால் அடித்துக் கீழேதள்ளினர். பின்னர் சிலர், வயிற்றில் ஏறி மிதித்து, காது கூசும் அளவுக்கு அசிங்கமான வார்த்தைகளால் திட்டினர். வக்கிர மனப்பான்மையுள்ள சிலர் அருள்சகோதரிகளின்  புடவையையும் இழுத்து மானபங்கப்படுத்தினர். துறவற வாழ்வின் அடையாளமாக அவர்கள் அணிந்திருந்த சிலுவையுடன் கூடிய கழுத்துச் செயினை இழுத்து அதைக்கொண்டு கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றனர். அருட்சகோதரிகள் தங்களைத் தற்காத்துக்கொள்ள பெரிதும் போராடினர். வன்
முறைக்கும்பல்  கழுத்தில் வெட்டுக்காயம் ஏற்படும் அள விற்கு கழுத்துச் சங்கிலியை அறுத்து எறிந்தனர். மயக்கமுற்ற நிலையில் தாக்குதலுக்கு உண்டான அருட்சகோதரிகளை மாணவ-மாணவிகள் ஓடிவந்து ஒரு வகுப்பறைக்குள் பத்திரமாக அழைத்துச் சென்று பாதுகாப்புக் கொடுத்தனர்.
அதே நேரத்தில் மற்றொரு கும்பல் தலைமை ஆசிரியர் அறை, பள்ளி அலுவலகம், வகுப் பறைகள் மற்றும் ஆய்வகங்களில் இருந்த அனைத்து பொருட் களையும் குறிப்பாக கணினி சாதனங்கள், ஆய்வக சாதனங் கள், விலையுயர்ந்த மேசை நாற்காலிகள், மின்சாதன பொருள்
கள் மற்றும் கதவு ஜன்னல்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி வன்
முறையில் ஈடுபட்டனர்.  அனைத்தும் தவிடு பொடியாக்கப் பட்டன. அலுவலகத்தில் இருந்த அருட்சகோதரி ஆரோக்கிய செல்வியை கண்டவுடன் மூர்க்கத்
தனமாக அறைக்கு வெளியே
இழுத்துவந்து உருட்டுக்கட்டை யால் கும்பலாகச் சேர்ந்து அடித்தும், காலால் உதைத்தும், புடவையை உருவியும் மானபங்கப்படுத்தி குற்றுயிரும், கொலை உயிருமாக விட்டுச்சென்றனர். 
இன்னும் சிலர் பள்ளியின்
முதல் தளத்திற்கு சென்று அனைத்து வகுப்புகளிலும் புகுந்து  ஸ்மார்ட் போர்டு மற்றும் அதற்குத் தேவையான துணைக் கருவிகள் மற்றும் மின்சாதனப் பொருள்களைச் சேதப்படுத்தி பள்ளி மைதானத்திற்குள் வீசி எறிந்தனர்.  மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களையும் உடைத்தெறிந்தனர். 
மற்றொரு கும்பல் பள்ளி
வளாகத்தில் இருக்கின்ற கன்னியர் இல்லத்தின் கதவை உடைத்து அத்துமீறி நுழைந்து, அங்குள்ள பொருள்களை அடித்து
நொறுக்கினர். கன்னியருடைய தனிஅறைக் கதவுகளை உடைத்து அங்கிருந்த பொருள்களை நாசப்படுத்தினர். மேலும் அருள்
சகோதரிகளின் சிற்றாலயத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த பீடப்பொருள்களை எல்லாம் சேதப் படுத்தி கிறிஸ்தவர்கள் புனிதமாக கொண்டாடும் பலிப்பீடத்தை அடித்து உடைத்து அவசங்கை (னுநளநஉசயவiடிn) செய்தனர்.  அதே சமயத்தில் வேறொரு கும்பல் பள்ளிவளாகத்தில் அமைந்துள்ள மாணவியர் தங்கும் உள்விடுதியில் புகுந்து தொலைக்காட்சி பெட்டி, கதவு ஜன்னல்களை உடைத்து நொறுக்கி, குடிநீர் மற்றும் கழிவுநீர் உட்பட அனைத்துக் குழாய்களையும் உடைத்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள்.
இந்த வன்முறைத் தாக்குதல் ஆரம்பித்த உடனே இதுபற்றி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்புக் கோரப்பட்டது. காவல் துறையினர் வருவதற்குள் வன்முறையாளர்களின் கோரத்தாண்டவ வெறியாட்டம் முடிந்து வளாகம் போர்க்களமாக காட்சியளித்தது. அருட்கன்னியர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியரின் அலறல் சத்தம் கேட்டு, மாணவ மாணவியரின் பெற்றோரும், பொதுமக்களும் உள்ளே ஓடிவந்தனர். இவர்களைக் கண்டதும் வன்முறை கும்பல் மெல்ல களைய ஆரம்பித்தது.  எல்லாம் முடிந்த சமயத்தில் காவல்துறையும் உள்ளே வந்து அமைதி ஏற்படுத்த முயற்சி செய்தனர். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்றார்கள்.
வன்முறைத் தாக்குதலுக்குள்ளான, அருட்
சகோதரிகள் அமலோற்பவம், பெர்னா, ஆரோக்கிய
செல்வி, பென்சி, வினோ ஆரோக்கியம் ஆகியோரும்
திருமதி ஹேமா, திருமதி பத்மினி ஆகிய ஆசிரியை களும், திருமதி சித்ரா, திருமதி. உஷா ஆகிய அலுவலகப் பணியாளர்களும் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். இவர்களில் ஆறுபேர் உடனடியாக கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவர் தனியார் மருத்துவமனையில் புறநோயாளி களாக சிகிச்சைபெற்று வருகின்றனர். 
இத்துயரமான நிலையில் அன்று காலை சுமார் 11.00 மணியளவில்  மாவட்ட  காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், மற்றும் காவலர்கள்,  பூங்குழலியின் பெற்றோரோடும் மற்றவர்களோடும் போர்க்களமாக காட்சியளிக்கும் இப்பள்ளிக்கு வந்து,  இன்னும் அதிக இழப்பீட்டுத் தொகை கேட்கிறார்கள், அதைக் கொடுத்தால்தான் பூங்குழலியின் உடலை வாங்கிக்
கொள்வோம் என்றும் சொல்கின்றனர். எனவே, தாங்கள் இழப்பீட்டுத்தொகையை இன்னும் கொஞ்சம் உயர்த்திக் கொடுத்து சமரசமாக முடிக்கும்படி வலியுறுத்தினர். நீண்ட விவாதத்திற்குபின் இழப் பீட்டுத் தொகை என்று எதுவும் கொடுக்க முடியாது என்று சொல்லி, அடக்கச் செலவிற்கு கருணையின் அடிப்படையில் ரூபாய் 50,000 கொடுக்கப்பட்டது. அதைப் பெற்றுக்கொண்டு அனைவரும் கலைந்து சென்றனர். 
 இந்த வன்முறைத் தாக்குதலால் பள்ளிக்கும், உள்விடுதிக்கும், கன்னியர் இல்லத்திற்கும் ஏற்
படுத்தப்பட்ட சேதத்தின் மதிப்பு ரூபாய் ஒரு கோடியைத் தாண்டும் என பொறியாளர்கள் கூறுகின்றனர்.
இத்தாக்குதலால் மாணவ மாணவியர் மன உளைச்சலுக்கு உள்ளாகி, பயத்தோடும் பதற்றத்தோடும் இருக்கின்றனர். இதில் குறிப்பாக அரசு பொதுத் தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் மிகுந்த மிரட்சிக்குள்ளாகியுள்ளனர். அவர்களால் தங்கள் தேர்விலும் படிப்பிலும் கவனம் செலுத்த இயலவில்லை. எந்த நேரத்திலும் ஆசிரியர்களும் அருட்சகோதரிகளும் மீண்டும் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்ற பீதியில் உறைந்துபோய் உள்ளனர்.  தங்களது எதிர்காலம் கடுமையாகப் பாதிக்கப்படும் என அஞ்சுகின்றனர். 
முடிவாக, 
1.    இது நன்கு திட்டமிடப்பட்ட, ஒரு பயங்கரவாத,  வன்முறைச் செயல் என்பது தெளிவாகிறது. ஏனெனில்  உள்ளே நுழைந்தவர்கள் நன்கு திட்டமிட்டு கும்பல் கும்பலாக நாலா பக்கமும் பிரிந்து மிகக் குறைந்த நேரத்தில் அனைத்து இடங்களையும் சூறையாடி, அடித்து நொறுக்கி, தாக்கி, தரைமட்டமாக்கியுள்ளனர். 
2.    உடைமைகளைச் சேதப்படுத்தியதோடு மட்டு மின்றி, அங்கு வாழும் அருள்சகோதரிகளைத்  தாக்கி, அவமானப்படுத்தி, ஆடைகளைக் களைந்து
மானபங்கப்படுத்தி, துறவு வாழ்வின் அடையாள மாக கழுத்தில் அணிந்திருந்த செயினை அறுத்தெறிந்து, அதைக்கொண்டு அவர்களை கொலை செய்யும் நோக்கத்துடன் கழுத்தை நெறித்த செயல், துறவு வாழ்வின் புனிதத்தைக் களங்கப்படுத்தும் செயலாகவும், அச்சுறுத்தும் செயலாகவும் உள்ளது. 
3.    மேலும் அருள்சகோதரிகள் வாழும் கன்னியர் இல்லத்தில் நுழைந்து, சேதப்படுத்தி, அவர்கள் செபிக்கப் பயன்படுத்தும் சிற்றாலயத்தில் அத்துமீறி, நுழைந்து அங்கிருந்த புனிதப் பொருள்களை அடித்து நொறுக்கி,  பீடத்தை அவசங்கை செய்ததும்,  பள்ளிக்கு முன்பாக இருக்கின்ற பள்ளியின் பாதுகாவலி சிறுமலர் புனித குழந்தை தெரம்மாளின் திருச்சுருபத்தின் தலைப்பகுதியை உடைத்ததும்  கிறிஸ்தவ மத உணர்வுகளை புண்படுத்தும் செயலாகவும், மதத்திற்கு எதிரான செயலாகவும் உள்ளது. 
4.    வன்முறைக் கும்பல், பள்ளியை அடித்து நொறுக்கி போர்க்களமாக்கி,  மிகப் பெரிய பொருளாதாரச் சேதத்தைச்  செய்துவிட்டு மீண்டும் போலிசார் மூலமாகவே இழப்பீட்டுத் தொகை கேட்டு வந்தது, இது அதிர்ச்சியளிப்பதோடு மட்டுமின்றி, அவர்களின் கொடூர மனநிலையை காட்டுகிறது. 
இதன் காரணமாக நாங்கள் வைக்கின்ற கோரிக்கைகள்:
1.    இத்தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து வன் முறையாளர்களையும் அதன் பின்னணியில் உள்ளவர்களையும்  உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி,  அவர்களுக்கு உரிய தண்டனையைப்  பெற்றுத்தர காவல்துறையும் அரசும் முன்வர வேண்டும். இந்தத் திட்டமிட்ட வன்முறையால் ஏறக்குறைய ரூபாய் ஒரு கோடிக்கு இழப்பீட்டைச் சந்தித்துள்ள இப்
பள்ளிக்கு உரிய இழப்பீட்டை அந்த வன்முறை யில் ஈடுபட்டவர்களிடமிருந்து பெற்றுத்தர வேண்டும். 
2.    இப்பள்ளிக்கும் இங்கு பயிலும் மாணவ மாணவி களுக்கும், இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், அருட்சகோதரிகள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பை காவல் துறையும் அரசும் தர வேண்டும். 
3.    இத்தாக்குதல் நடைபெற்றபோது அருட் சகோதரிகள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோரிடமிருந்து வன்முறைக் கும்பல் கைப்பற்றிய  ஏழு செல்போன்களையும் அதன் சிம்கார்டுகளையும் உடனடியாக காவல் துறையினர் பெற்றுத்தரவேண்டும். அவற்றைக்  கொண்டு அந்த வன்முறைக்கும்பலை கைது செய்ய வேண்டும். அந்த செல்போன்கள்  சேதப்படுத்தப்பட்டிருந்தால் அதற்குரிய நஷ்ட ஈட்டைத் தரவேண்டும். 
4.    எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், கிறிஸ்தவ சிறு பான்மை மதத்தைச் சார்ந்த பெண் துறவிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும், சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Comment