குடந்தை ஞானி
பொன்விழாக் கண்ட இளம் மாணவர் இயக்கம் (YSM)
- Author குடந்தை ஞானி --
- Thursday, 16 Dec, 2021
நவம்பர் மாதம் ஆறாம் தேதி இளம் மாணவர் இயக்கம் தங்களுடைய பொன்விழாவை பெங்களூருவில் கொண்டாடி மகிழ்ந்தனர். 1970 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இவ்வமைப்பு தங்களின் பொன்விழாவை 2020 ஆண்டு கொண்டாட திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கொண்டாடவில்லை. ஆகவே, இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில், நவம்பர் மாதம் ஆறாம் தேதி, தேசிய ஆன்ம இயக்குநர் அருள்பணியாளர் சேட்டன் மச்சோடோ அவர்களின் தலைமையில் திருப்பலி நிறைவேற்றி நூற்றுக்கணக்கான முன்னாள், இன்னாள் உறுப்பினர்கள், தலைவர்கள், செயல்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து இவ்விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆசிய கண்ட அளவிலான YCS இயக்குநர் அருள்பணியாளர் அனில் டிசௌசா அவர்கள் மறையுரை வழங்கினார். பொன்விழாக் கண்ட இளம் மாணவர் இயக்கம் இந்திய மண்ணில் இன்னும் சிறப்பாக செயல்பட வாழ்த்துவோம். செபிப்போம்.
Comment