No icon

திருத்தந்தையின் முழக்கம்

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்

தவக்காலத்தில் கடவுளன்பு, சகோதர அன்பு என்னும் ஒரே அன்பில் வாழ நாம் அழைக்கப்படுகின்றோம். செபத்தில் நம்மை நிலைநிறுத்துவோம். கடவுளுடைய வார்த்தையை நம்மில் வரவேற்பதில், காயப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு முன், நல்ல சமாரியன் போன்று நம்மை நாம் நிலைநிறுத்துவோம்.”

- மார்ச் 4, திருத்தந்தையின்டுவிட்டர்குறுஞ்செய்தி

போரினால் ஏற்படும் இத்தகைய துன்பங்கள், எளியவர்கள் மற்றும் பலவீனமானவர்களின் எதிர்காலத்தில் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.”      

- மார்ச் 3, மூவேளைச் செப உரை

தவக்காலப் பயணத்தில் நமக்குள்ளும், நம்மைச் சுற்றிலும் சந்தைகளை அல்ல; மாறாக, இல்லங்களை உருவாக்கச் செபிப்போம். கஞ்சத்தனம் மற்றும் அவநம்பிக்கைக் கொண்ட சந்தைகளைப் போலல்லாமல், நம்பிக்கையுள்ளவர்களாக, தொய்வின்றி இறைத்தந்தையின் கதவை நாம் தட்டுவோம்.”

- மார்ச் 3, ஞாயிறு மறையுரை

குழந்தைகளாகிய நீங்கள், நாம் அனைவரும் குழந்தைகள், சகோதர-சகோதரிகள் என்பதை நினைவூட்டுகிறீர்கள். இந்த உலகத்திற்குப் பிறரால் கொண்டு வரப்பட்ட நாம், பிறரை அன்பு செய்வதிலும், பிறரிடம் இருந்து அன்பைப் பெறுவதிலும் வளர்ச்சி அடைய வேண்டும்.”

- மார்ச் 2, உலகக் குழந்தைகள் தினத்திற்கான செய்தி

செபிப்பது, செபிக்கக் கற்பிப்பது ஆகிய இரண்டும் திரு அவையின் மிக முக்கியமான பணிகள். நம்பிக்கை என்னும் விளக்கை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குக் கொண்டு செல்லுங்கள்.”

- மார்ச் 1, அகில உலகத் திரு அவைக்கான செய்தி

Comment