No icon

திருத்தந்தையின் முழக்கம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்:

இயேசு அலகையுடன் ஒருபோதும் உரையாடல் செய்யவில்லை. அதனை விரட்டுகின்றார்; அதனை அடக்கி ஆள்கின்றார்.”

- செப்டம்பர் 25 திருப்பயணிகளுக்குக் கொடுத்த செய்தி

உங்களுக்கென ஒரு பாணியை உருவாக்கிப் படியுங்கள், பொருளுணர்ந்து அனுபவப்பூர்வமாக உணர்ந்து படியுங்கள். உங்களது நலனுக்காக மட்டுமன்றி, பொது நலனுக்காகப் படியுங்கள்.”

- செப்டம்பர் 28, லூவைன் கத்தோலிக்கப் பல்கலைக்கழக மாணவர்களிடம் ஆற்றிய உரை

நமது தூய வாழ்விற்கு இடையூறாக இருப்பவற்றை விட்டு விலகி, அன்பில்லாமல் செய்யப்படும் எல்லாம் வீண் என்பதை உணர்ந்து இறை இரக்கத்தின் நற்செய்தியை எடுத்துரைப்பவர்களாக ஒன்றித்து வாழ்வோம்.”  

- செப்டம்பர் 29,  40,000 பெல்ஜியம் மக்களுக்கு நிறைவேற்றிய ஞாயிறு திருப்பலி மறையுரை

சமுதாயத்தின் விளிம்பு நிலையில் வாழ்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து, உண்மையான அழகையும் நல்லிணக்கத்தையும் உலகிற்கு மீட்டெடுக்க வேண்டும்

- செப்டம்பர் 30, அழகின் பாதுகாவலர்கள் பிரதிநிதிகள் மத்தியில் உரை

பாதுகாத்தல் என்பது காத்தல், பராமரித்தல், கண்காணித்தல், தடுத்தல், கவனித்தல் போன்றவற்றை உள்ளடக்கிய பன்முகச்செயல்.”

- செப்டம்பர் 30 இத்தாலிய ஆயர் பேரவை உறுப்பினர்கள் சந்திப்புச் செய்தி

Comment