No icon

மனித மாண்பைச் சிதைக்கும் வன்முறை!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் திருமணத்திற்குப் புறம்பேயான பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டுடன் பொது இடத்தில் வைத்து ஓர் ஆணும்-பெண்ணும் தொடர்ந்து அடித்துக் கொடுமைப்படுத்தப்பட்டது குறித்து தலத் திரு அவை ஆயர்களும், மனித உரிமை நடவடிக்கையாளர்களும் தங்கள் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். பொது இடத்தில் வைத்துச் சட்டத்திற்குப் புறம்பாக ஓர் ஆணும்-பெண்ணும் கொடுமையாகத் தாக்கப்பட்ட காணொளி தன்னை மிகவும் வருத்தியதாக மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா பேராயர் தாமஸ் டி சூசா தெரிவித்துள்ளார். மேலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அங்கத்தினர்கள், ஓர் ஆணையும், பெண்ணையும் தாக்க, 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேடிக்கை பார்த்தது குறித்துத் தன் கண்டனத்தை வெளியிட்ட பேராயர், ஒரு பெண் முதல்வராக இருக்கும் மாநிலத்தில் இத்தகைய செயல்கள் எதிர்பார்க்கப்படாதது என்று கூறினார்.

Comment