No icon

பங்குத்தந்தையின் நன்றியும்! வரவேற்பும்!

கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார் (சஉ 3:11)

இந்த இறைவார்த்தையின் பொருட்டு இறைவனுக்கு நன்றி சொல்லுகின்றேன். நம் இறைவனுக்கு ஓர் இல்லிடம் அமைக்க வேண்டுமென்ற விருப்பத்தை அனுகூலமாக மாற்றிய தேவனுக்கு இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகள் பல. மிகக் கடினமான சூழ்நிலைகளும் பிரச்சனைகளும் ஆட்கொண்ட போதிலும் உமக்கான ஆலயத்தை எழுப்பும் மேலான செயலைச் செய்ய எங்களைத் தேர்ந்துகொண்டதற்கும், என் பெயருக்கு கோவில் கட்டவேண்டுமென்ற உம் எண்ணம் நல்லது என ஆசீர்வதித்தற்காகவும் நன்றி! கடந்த 7 ஆண்டுகளாக நாங்கள் உளமார செபித்த ஆலயத் திருப்பணிக்கான மன்றாட்டு உள்ளத்தில் உறுதியைத் தந்தது. வலிமையோடு முன்னோக்கி செல்ல ஒவ்வொரு புதிய வழிகளை ஏற்படுத்திக்  கொண்டேயிருந்தது.

இம்மாபெரும் திருப்பணிக்கு உதவியாக இருந்த கோவை மறைமாவட்ட ஆயர், முதன்மைகுரு, பொருளாளர் தந்தை, மறைமாவட்ட  அருள்சகோதர  சகோதரிகள், அனைத்து வகையான கட்டுமான பணிகளைச் செய்த பொறியாளர், பணியாளர்கள், விழாக்குழுவினர், உள்ளூர் மற்றும் வெளியூர் பங்குமக்கள், இறைமக்கள், ஆலய வடிவமைப்பாளர் மற்றும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ‘நம் வாழ்வு’ சிறப்பிதழ் வழியாக அனைத்தையும் அறியும் வாசக உள்ளங்கள் அனைவரையும் கோவை சவேரியார்பாளையம் புதிய ஆலய அர்ச்சிப்பு நிகழ்வுகளுக்கும் பிற நிகழ்வுகளுக்கும் வருக! வருக!! என்று இருகரம் கூப்பி அழைக்கின்றேன்.

Comment