No icon

குடந்தை ஞானி

துறவு சபைகள் தனி வரத்தின்படி வாழ்வதற்கு அழைப்பு – திருத்தந்தை

அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் நெருக்கடி நிறைந்த காலக் கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், அவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் துறவியருக்கு விடுத்துள்ள அழைப்பின்படி வாழ அழைக்கப்பட்டுள்ளனர் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

துறவு சபைகளை ஆரம்பித்த நிறுவனர்களின் தனிவரத்தின் தனித்துவத்தை துறவியர் அனைவரும் வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும், துறவியர் பேராயத்தின் தலைவர் கர்தினால் ஜோஓ பிராஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறினார். UISG எனப்படும் உலகளாவிய பெண் துறவு சபைகளின் தலைவர்கள் அமைப்பின் 22வது ஆண்டு நிறையமர்வு மாநாட்டை, மே 2 ஆம் தேதி, திங்களன்று திருப்பலியோடு ஆரம்பித்து வைத்த கர்தினால் ஜோஓ பிராஸ் அவர்கள், அம்மாநாட்டின் முதல் அமர்வில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.

இக்காலத்தில் துறவியர் எதிர்கொள்கின்ற வலுவற்றநிலை பற்றிய சில அம்சங்களை எடுத்துரைத்த கர்தினால் ஜோஓ பிராஸ் அவர்கள், இக்காலச் சமுதாயம் எதிர்கொள்கின்ற வலுவிழந்த நிலையே துறவியர் வாழ்விலும் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Comment