No icon

திருத்தந்தையின் முழக்கம்

(நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் மற்றும் சுற்றறிக்கைகளின் சாரல்)

கடல்மீது நடப்பதற்கான அழைப்பை ஏற்று, நீரின்மீது நடந்த புனித பேதுரு, கடலில் மூழ்கவிருந்த வேளையில் இயேசுவை நோக்கி, ‘ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்எனக் கூக்குரலிட்டதைப்போல், நாமும் தீமைகள் மற்றும் அச்சங்களிலிருந்து நம்மைக் காக்க வல்ல இயேசுவை நோக்கி, நம்மைக் காக்கும்படி அழைப்பு விடுப்போம்.”

- ஆகஸ்ட் 13, ஞாயிறு மூவேளை செபவுரை

நமக்கு எதிராகச் செல்லும் சீற்ற அலைகள் மற்றும் புயலைக் காட்டிலும், இயேசு சக்தி நிறைந்தவர் என்பதை நாம் நம்புகின்றோமா? நம் துன்ப வேளைகளில் அவரை நோக்கி நம் குரலை எழுப்புகின்றோமா?”

- ஆகஸ்ட் 13, ஞாயிறு மறையுரை

அன்பான இளையோரே, பெரிய கனவு காண்பதற்கும், வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்குமான துணிவை ஒருபோதும் இழக்காதீர்கள்! பாதுகாப்புக் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டு, அதை உலகம் முழுவதும் பரப்புங்கள்; உடன்பிறந்த உறவின் வெற்றியாளர்களாக மாறுங்கள்; கடவுள் மற்றும் நல்ல ஆலோசகர்களால் வழிநடத்தப்படுவதன் வழியாக வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளுங்கள்.”

- ஆகஸ்ட் 12, இளையோருக்கான

குறுஞ்செய்தி

இயேசுவின் அன்பின் இயக்கத்தினால், மற்றவர்களைச் சந்திக்கச் செல்வோம்; நற்செய்தி அறிவிப்பிற்கான புதிய பாதைகளைக் கண்டுபிடிக்கும் துணிவுடன் பணிசெய்யப் புறப்படுவோம்.”

- ஆகஸ்ட் 11, கீழைத் திரு அவைக்கான செய்தி

நம் செயல்கள் வழியாகப் பிறரை அன்புகூர்கின்றோம். அவ்வன்பே நம்மை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கின்றது. பிறரை அன்புகூரும் எவரும், இயேசுவின் பெயரால் ஊழியம் செய்வதன் வழியாக மற்றவர்களை அடைய விரைகிறார்கள்.”

- ஆகஸ்ட் 10, ‘டுவிட்டர்குறுஞ்செய்தி

ஏழ்மை, அநீதி மற்றும் போரால் சிதறுண்டு துண்டாக்கப்பட்டுள்ள இவ்வுலகிற்கு, கடவுள் மட்டுமே தரவல்ல குணப்படுத்துதலுக்காகவும், அமைதிக்காகவும், மனந்திரும்புவதற்காகவும், நற்செய்தியைப் பரப்புவதற்காகவும் ஒன்றிணைந்து செபிப்போம்.”

- ஆகஸ்ட் 9, புதன் மறைக்கல்வி

Comment