No icon

மேய்ப்புப்பணி பயணம்

மும்மாதங்களுக்கு திருத்தந்தை மேற்கொள்ளும் திருவழிபாட்டு நிகழ்வுகள்

2022 செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றவிருக்கும் திருவழிபாடுகள் பற்றிய விவரங்களை, திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பான பேரருள்திரு. தியெகோ ரவெல்லி அவர்கள், செப்டம்பர் 08 ஆம் தேதி  வெளியிட்டுள்ளார்.

செப்டம்பர் 25 ஆம் தேதி, திருவழிபாட்டு ஆண்டின் 26 ஆம் ஞாயிறன்று மேய்ப்புப்பணி பயணமாக, இத்தாலியின் மத்தேரா நகருக்குச் செல்வார்.

திருவழிபாட்டு ஆண்டின் 28 ஆம் ஞாயிறாகிய அக்டோபர் 9 ஆம் தேதி உள்ளூர் நேரம் காலை 10.15 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில், அருளாளர்கள் ஸ்கேலாபிரினி,சாட்டி ஆகிய இருவரையும் புனிதர்கள் என அறிவிக்கும் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றுவார்அக்டோபர் 11 ஆம் தேதி உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் தொடங்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு நிறைவுத் திருப்பலியை திருத்தந்தை நிறைவேற்றுவார்.

நவம்பர் 2 ஆம் தேதி, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், காலை 11 மணிக்கு, இவ்வாண்டில் இறைபதம் சேர்ந்த கர்தினால்கள் மற்றும் ஆயர்களின் ஆன்மாக்களின் நிறையமைதிக்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிறைவேற்றுவார்.

Comment