No icon

திருத்தந்தையின் முழக்கம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்:

கிறிஸ்து உங்கள் நம்பிக்கையை அன்பாக மாற்றட்டும். அவரின் அன்பு நேர்மையானது, நம்பகத்தன்மைகொண்டது மற்றும் உண்மையானது, இதனால் உங்கள் இளமை இயேசுவுக்கும் உலகத்திற்கும் ஒரு கொடையாக மாறட்டும்.”

- ஜூலை 15, தேசிய இளைஞர் அமைச்சகத் தலைவர்களின் கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தி.

ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களை வரவேற்கும் பழக்கத்தை மேம்படுத்துவதற்கும், நாம் வாழும் இடங்கள் மற்றும் கோவில்கள் உலகிற்கு ஆறுதல் அளிக்கும் ஒரு திறந்த புகலிடமாக இருக்கட்டும்.”

- ஜூலை 17, உரோமையின் பழமைவாய்ந்த அன்னை மரியாவின் திரு உருவத்தை நிறுவியதன் 1500-வது ஆண்டு நிறைவு விழா வாழ்த்துச் செய்தி.  

வாழ்க்கையானது எப்பொழுதும் வாழ்வதற்குத் தகுதியானது. நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் கடவுள் கொடுத்த ஒரு பரிசு, நமது வாழ்நாள்களின் நீட்டிப்பு, நமது இருத்தல்.”

- ஜூலை 20, மறைச்சாட்சியான தூய அப்பலோனாரிஸ் நினைவு நாளன்று வாழ்க்கை குறித்து, ‘எக்ஸ்தளத்தில் பதிவிட்ட செய்தி.

ஓய்வு தேவை என்பது இவ்வுலகிலிருந்து தப்பிப்பதோ அல்லது தனி மனித நலனில் மட்டுமே கவனம் செலுத்துவதோ அல்ல; நம்மைச் சுற்றியுள்ளோரின் தேவைகளில், அன்பான அக்கறையுடனும், இரக்கத்துடனும் பதிலளிக்க, நம் உடலையும், ஆன்மாவையும் புத்துயிர் பெறச் செய்வதற்கு, ஓய்வு அவசியம்.”

- ஜூலை 21, ஞாயிறு மூவேளைச் செப உரை

Comment