No icon

திருத்தந்தையின் முழக்கம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்:

“இறைவனைத் தேடுவதன் வழியாகவும், என் சகோதர சகோதரிகளை அன்புகூர்வதன் வழியாகவும், நான் விண்ணக வாழ்விற்காகப் படைக்கப்பட்டவன் என்பதை அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா நினைவுபடுத்துகிறது.”

- ஆகஸ்டு 15, அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவின் சிறப்பு மூவேளைச் செப உரை.

“மனிதனின் சதையை உண்பதும், அவனது இரத்தத்தைக் குடிப்பதும் மனிதாபிமானமற்றதாக ஒருபுறம் தெரிந்தாலும், மறுபுறம் மீட்பர் இயேசுவின் இரத்தமும் சதையும் மனிதநேய மீட்பையும், தமது வாழ்க்கையையே நமக்கான உணவாக வழங்கிய அவரின் அர்ப்பணத்தையும் எடுத்துரைக்கின்றது.”

- ஆகஸ்டு 18, ஞாயிறு மூவேளைச் செப உரை.

“அப்பாவி மக்களைத் தாக்கக்கூடிய வன்முறைக்கு மரண தண்டனை எந்த வகையிலும் தீர்வாகாது. மரண தண்டனைகள், நீதியைக் கொண்டு வருவதற்குப் பதிலாக, பழிவாங்கும் உணர்வைத் தூண்டுகின்றன.”

- ஆகஸ்டு 18, ‘A Christian on Death Row: My Commitment to Those Condemned’ என்ற புத்தகத்திற்கு எழுதிய ஆசியுரை.

“குடும்பத்திலும், சமூகத்திலும் மகிழ்ச்சியுடன் நற்செய்தியைக் காணுங்கள்.”

- ஆகஸ்டு 18, பிக்காரி ஸ்லாஸ்கியில் நடைபெற்ற திருப்பலி மறையுரை.

“மனிதகுலத்தைக் குணப்படுத்துகின்ற மற்றும் மாற்றுகின்ற ஆற்றல் நம் ஒவ்வொருவரின் இதயங்களில் மலர்கின்றது.”

- ஆகஸ்டு 19, ‘மக்கள் மத்தியில் நட்புறவை வளர்த்தல்’ கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தி.

Comment