No icon

திருத்தந்தையின் முழக்கம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்:

உலகில் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் பாலங்களைக் கட்டியெழுப்புவதாகவும், தடுப்புச் சுவர்களை உடைத்தெறிவதாகவும், அமைதியுடன் கூடிய உறவை வளர்ப்பதாகவும் இருக்கட்டும்.”

- ஜூலை 26, ‘எக்ஸ்தளப் பதிவுச் செய்தி.

திருப்பலியின் திருவிருந்து பவனியின்போது கிறிஸ்துவின் திரு உடலையும், திரு இரத்தத்தையும் பெற்றுக்கொள்ள பலிபீடம் நோக்கி நாம் செல்லும்போது ஒன்றிணைந்து செல்கின்றோம் என்பது அர்த்தம்.”

- ஜூலை 28, ஞாயிறு மூவேளைச் செப உரை.

இறையருளால் என்னிடம் இருப்பதை என் உடன் சகோதர-சகோதரிகளுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் தனித்துவமான ஒன்று இருப்பதாக நான் உண்மையிலேயே நம்புகிறேனா? அதைக் கொடுக்கத் தயாராக இருக்கின்றேனா?”

- ஜூலை 28, ஞாயிறு மூவேளைச் செப உரை.

தாத்தா பாட்டியர் தலத் திரு அவையின் வளர்ச்சிக்கும் வாழ்விற்கும், அவர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பையும் நாம் அறிந்துகொள்வதன் வழியாகத் தலைமுறைகளுக்கு இடையே இணைப்பை உருவாக்குதல், தனிமையை எதிர்த்துப் போராடுதல் போன்றவற்றை அவர்களுக்கு அளிக்க முடியும்.”

- ஜூலை 28, நான்காவது ஆண்டு உலகத் தாத்தா பாட்டியர் தினக் கொண்டாட்டச் செய்தி.

நான் உன்னோடு இருக்கிறேன்என்ற இயேசுவின் அன்பு, நம்மால் பிறருடன் பகிரப்பட்டு நம் அனைவரோடும் இயேசு இருப்பதற்கு நாம் உதவ வேண்டும். கிறிஸ்துவோடு இருப்பது என்பது, நமக்கு அடுத்திருப்பவர்களுடனும் நெருக்கமாக இருப்பதைக் குறிப்பிடுகிறது.”

- ஜூலை 30, பலிபீடச் சிறார்களின் திருப்பயணச் செய்தி.

Comment