No icon

ஜூன் 26    

புனித ஜோஸ் மரியா எஸ்க்ரிவா தே பாலக்கர்

புனித ஜோஸ் மரியா எஸ்க்ரிவா தே பாலக்கர் ஸ்பெயினில் 1902 இல் ஜனவரி 9 ஆம் நாள் பிறந்தார். கத்தோலிக்கப் பள்ளியில் பயின்று பக்தியில் வளர்ந்தார். சட்டம் பயின்று, 1925 இல் குருவாகி மேய்ப்புப் பணியில் அதிதீவிரம் காட்டினார். ஏழைகள், குழந்தைகள், நோயாளிகளுக்கு உதவினார். உழைப்பின் மேன்மையை உணர்ந்து கடினமாக உழைத்தார். இறைவார்த்தையை தியானித்து இறையன்பை சுவைத்தார். சமூகத்திற்கும், திரு அவைக்கும் தனது வாழ்வை அர்ப்பணித்தார். இறைமக்கள் தூய்மையை பின்பற்ற வழிகாட்டினார். இறைபணி என்ற அமைப்பை உருவாக்கி இறையன்பும், சகோதர அன்பையும் எடுத்துரைத்தார். எதிர்ப்புகள் சந்தித்தபோது இறை துணையுடன் முன்னேறினார். தொழிற் பள்ளிகள், விவசாய பயிற்சிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் தொடங்கி, கிறிஸ்தவ விழுமியங்களுக்கு சான்று பகர்ந்து 1975, ஜூன் 26ஆம் நாள் இறந்தார்.

Comment