No icon

நவம்பர்  01 

புனிதர் அனைவரின் பெருவிழா

மனிதம் வாழ்விற்கான அழைப்பு, தூய வாழ்விற்கான அழைப்பு. ஒரு நல்ல மனிதன் மெய்யாகவே புனிதனாக இருக்கிறான். அன்பு, நம்பிக்கை, எதிர்நோக்கு மனித வாழ்வைப் புனித வாழ்வாக மாற்றுகிறது. புனிதர்கள் இயேசு கிறிஸ்துவை அறிந்து, அனுபவித்து, அவர் பொருட்டு அனைத்தும் துறந்து இயேசுவுக்கு தங்களை அர்ப்பணித்து, தன்னலமற்ற தியாக வாழ்வு வாழ்ந்தவர்கள். இயேசு கிறிஸ்துவை மீட்பராக ஏற்று, இறையாட்சி பணி செய்து, மறைசாட்சியாக இறந்தவர்களின் நினைவை தாய்த்திரு அவை நினைவுகூறும் நாள்தான் புனிதர் அனைவரின் பெருவிழா. புனிதர்கள் நமக்கு முன்மாதிரியாக திகழ்பவர்கள். அன்பிலும், நம்பிக்கையில் வளர துணைபுரிபவர்கள். இறையன்புக்கும், நம்பிக்கைக்கும், எதிர்நோக்குக்கும் ஆகியவற்றை பின்பற்றிய புனிதர்களை பின்பற்றுவோம்.

Comment