No icon

நவம்பர்  02 

இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு

இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள். தாய்த்திரு அவை இறந்து விண்ணகத்தில் இருக்கின்றவர்களையும், உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமாக்களையும் நினைக்கின்ற புனிதநாள். உயிர்வாழ்வோர் செபம், தவம், தானதர்மம் வழியாக இறந்துபோன ஆன்மாக்களுக்கு உதவி செய்யும் புனிதம் மிகுந்த நாள். உத்தரிக்கின்ற ஸ்தல ஆன்மாக்கள் இறைவனை முகமுகமாய் தரிசிக்க உதவி செய்கின்ற தூய நாள். இறந்த ஆன்மாக்கள் அனைவரும் விண்ணக பேரின்பத்தில் நுழைய வழிகாட்டும் நாள். ஒருமுறை புனித ஜெத்துருவிடம் இயேசு காட்சியளித்து, “இயேசு, மரியா, சூசை நான் உங்களை அன்பு செய்கிறேன் என்று செபிக்கின்றபோது ஒரு ஆன்மா உத்தரிக்கின்ற இடத்திலிருந்து விண்ணக வாழ்வுக்கு கடந்து செல்கின்றதுஎன்றுகூறி, இறந்தோருக்காக செபிக்க அழைக்கிறார்.

Comment