No icon

2025-ஆம் ஆண்டு யூபிலி விழாவிற்கான புதிய நூல்

அகில உலகக் கத்தோலிக்கத் திரு அவை 2025- ஆம் ஆண்டில் யூபிலி விழாவைக் கொண்டாடத் தயாராகி வரும் இத்தருணத்தில், கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களுக்கான இறைவேண்டல் வழிகாட்டியாகஎங்களுக்குச் செபிக்கக் கற்றுக்கொடும்என்ற நூல் ஒன்றை நற்செய்தி அறிவிப்புத் திருப்பீடத்துறை வெளியிட்டுள்ளது. புனித லூக்காவின் நற்செய்தியில்ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்’ (காண்க. லூக் 11:2) என்று கேட்ட இயேசுவின் சீடர்களின் கோரிக்கையிலிருந்து இந்நூலிற்கான தலைப்பு எடுக்கப்பட்டுள்ளது என்றும், இது யூபிலிக்கான திரு அவையின் தயாரிப்புக்கான கட்டமைப்பை வழங்குகிறது என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது. ‘செபிக்கக் கற்றுக்கொடும்என்ற இந்நூலின் இத்தாலியப் பதிப்பைத் தற்போது நற்செய்தி அறிவிப்புத் திருப்பீடத் துறையின் இணையதளத்தில் இருந்து எந்தக் கட்டணமும் இல்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்த்துக்கீசியம், பிரஞ்சு மற்றும் போலிஷ் பதிப்புகள் விரைவில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment