No icon

அழியாத உடல்: மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது!

புனித அவிலா தெரேசாவின் வெள்ளி சவப்பெட்டி ஆகஸ்டு 28 அன்று திறக்கப்பட்டது, 1582 -இல் அவர் இறந்ததிலிருந்து அவரது உடல் அழியாமல் இருப்பதை உறுதிப்படுத்தியது. புனித தெரேசா கத்தோலிக்கத் திரு அவையின் சிறந்த மறைவல்லுநராகத் திகழ்ந்தவர்திரு அவையில் பல சீர்திருத்தங்களைத் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வத்திக்கான் ஒப்புதலுடன் இத்தாலிய மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் அவரது சவப்பெட்டி திறக்கப்பட்டுள்ளது.

புனித தெரேசாவின் சவப்பெட்டி கடைசியாக 110 ஆண்டுகளுக்கு முன்பு 1914 -இல் திறக்கப்பட்டது. இது கடைசியாக 1914 -இல் திறக்கப்பட்டபோது இருந்த அதே நிலையில் உள்ளது என்பதைக் காண முடிகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்

Comment