No icon

குடந்தை ஞானி

கர்தினால் காச்சியாவில்லன் இறைபதம் சேர்ந்தார்

திருப்பீடத்தின் பாரம்பரியச் சொத்துக்கள் மேலாண்மை அமைப்பின் (APAS) முன்னாள் தலைவரும், இந்தியா, நேபாளம் உட்பட பல்வேறு நாடுகளில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றியவருமான, கர்தினால் அகுஸ்தீனோ காச்சியாவில்லன் அவர்கள் தனது 95வது வயதில், மார்ச் 05 ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலையில் இறைபதம் சேர்ந்தார்.

அடக்கச்சடங்கு, மார்ச் 07ஆம்  தேதி திங்களன்று இடம்பெற்றது. கர்தினால் காச்சியாவில்லன் அவர்களது இறப்போடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 212 ஆகவும், அவர்களில் புதிய ஒரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய எண்பது வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 119 ஆகவும் மாறியுள்ளன.

Comment