No icon

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை:

தொடக்கக்காலக் கிறிஸ்தவர்கள் கொண்டிருந்த நட்புறவு

திருத்தூதர் பணிகள் குறித்து, மறைக்கல்வி உரைகளில் தன் எண்ணங்களை, திருப்பயணிகளோடு பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைகல்வியுரை ஜூன் 26 ஆம் தேதி, புதன் கிழமை, இறைவன் மீதும், தங்கள் உடன்வாடிந சகோதரர்கள் மீதும் தொடக்கக்காலக் கிறிஸ்தவர்கள் கொண்டிருந்த அன்பு குறித்ததாக இருந்தது.
முதலில் திருத்தூதர் பணி நூலிலிருந்து, ‘அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதலும் இறைவேண்டலிலும் உறுதியாடீநு நிலைத்திருந்தார்கள்...... நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்; எல்லா உடைமைகளையும் பொதுவாடீநு வைத்திருந்தனர். நிலபுலன்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கேற்ப பகிர்ந்தளித்தனர் (திப 2:42, 44-45)’ என்ற பகுதி பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது. அதன்பின் திருத்தந்தையும், தன் உரையைத் தொடங்கினார்.
அன்பு சகோதரர், சகோதரிகளே, திருத்தூதர் பணிகள் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, முதல் கிறிஸ்தவ சமுதாயத்தின் வாடிநவுமுறை குறித்துச் சிந்திப்போம். திருத்தூதர்களின் உரைக்குச் செவிமடுக்க எருசலேமில் திருஅவையாகக் கூடியிருந்த மக்களை, அனைத்துக் கிறிஸ்தவ சமுதாயத்தின் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகிறார். புனித லூக்கா. முதல் கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்துவில், சகோதரர் சகோதரிகளாக, திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாடீநு நிலைத்திருந்தார்கள்(திப 2:42). சகோதரத்துவத்திலும் உடன்பிறந்த உணர்விலும் பிறரன்பிலும் பிறரின் தேவைகள் குறித்த அக்கறையிலும், ஒன்றிணைந்திருந்த ஒரு சமுதாயத்தை நம்முன் வைக்கிறார், புனித லூக்கா. ஒவ்வொரு காலத்திலும், திருஅவை, ஒப்புரவுடைய மனித குலத்தின் புளிப்புமாவாகவும், உண்மையான நீதியும் அமைதியும்கொண்ட உலகின் முன்னோடியாகவும் விளங்க அழைப்புப் பெற்றுள்ளது. உண்மையான திருவழிபாட்டு வாடிநவை வாடிநந்து, திருநற்கருணையிலும் செபத்திலும் உயிர்த்த இயேசுவின் பிரசன்னத்தை அனுபவித்து, மீட்பளிக்கும் அன்பை இவ்வுலகிற்கு எடுத்துச் செல்ல பலம் பெறுகிறது திரு அவை. திருத்தூதர்களைச் சுற்றிக் குழுமியிருந்த தொடக்கக்காலக் கிறிஸ்தவர்களைப் போல் நமது சமுதாயங்களும் இறைவன் மற்றும் நம் சகோதரர்களுடன் சந்திப்பிற்கும் ஆழமான செபத்திற்கும் உரிய இடங்களாக மாறுவனவாக. இதுவே, புனிதர்களுடன் ஒன்றிப்புக்கும் வானக எருசலேமுக்கும் கதவுகளைத் திறப்பதாக இருக்கும்.
இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், வரும் வெள்ளிக்கிழமையன்று திருஅவையில் சிறப்பிக்கப்படவிருக்கும் இயேசுவின் திருஇதய திருவிழாவை நினைவூட்டி, இயேசுவின் இதயத்தை உற்றுநோக்கி அதிலிருந்து கற்றுக்கொள்வோம் எனக்கூறித் தன் அப்போஸ்தலிக்க ஆசியையும் வழங்கினார்.

Comment