No icon

அருள்பணி ஆபிரகாம் கவலக்காட் ச.ச நூலுக்கு விருது

வத்திக்கான் செய்தித்துறையில் பணியாற்றும் சலேசிய அருள்பணியாளர் ஆபிரகாம் கவலக்காட் ச.ச. எழுதிய “இறைவனின் வியத்தகு வழிகள்” என்ற நூலுக்கு, அண்மையில், நியுயார்க் நகரில், விருது ஒன்று வழங்கப்பட்டது. நியுயார்க் நகரில் அமைந்துள்ள இத்தாலியத் தூதரகத்தில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில், சலேசிய சபையைச் சேர்ந்த கர்தினால் ஆஸ்கர் ரொத்ரிகுவெஸ் மரதியாகா, திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் தலைவர் - முனைவர் பவுலோ ருஃபீனி மற்றும் இந்த அவையின் செடீநுதிப் பிரிவு இயக்குநர் - முனைவர் அந்திரேயா தொர்னியெல்லி ஆகியோர் கலந்துகொண்டனர். கிறிஸ்தவர் அல்லாதோரின் மீட்பைக் குறித்து இரண்டாம் வத்திக்கான் சங்கம் தொடங்கி, பல்வேறு திருஅவைப் படிப்பினைகள் மற்றும் திருத்தந்தையரின் கருத்துக்கள் ஆகியவை, “இறைவனின் வியத்தகு வழிகள்” என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
திருத்தந்தையர்களான புனித 23 ஆம் ஜான், புனித 6 ஆம் பவுல், புனித 2 ஆம் ஜான்பால், முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட், மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் ஆகிய அனைவரும், பகிர்ந்துள்ள கருத்துக்கள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

Comment