No icon

இளையோரே, திருஅவைக்கு நீங்கள் தேவைப்படுகின்றீர்கள் - திருத்தந்தை

இளையோர் மாமன்றத் தந்தையர் மிகவும் விரும்பியது போன்று, மேய்ப்புப்பணியில் மனமாற்றம் கொண்டுவருவதில் இளையோர் முதன்மைக் கருவி களாக உள்ளனர் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ், சனிக்கிழமையன்று ஓர் இளையோர் குழுவிடம் கூறினார்.
பொதுநிலையினர், குடும்பம், மற்றும் வாழ்வு திருப்பீட அவை ஏற்பாடு செய்த 11வது உலகளாவிய இளையோர் கூட்டத்தில், 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து கலந்துகொண்ட ஏறத்தாழ 350 பிரதிநிதிகளை, ஜூன் 22, சனிக்கிழமையன்று, வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், எம்மாவுஸ் சீடர்களின் அனுபவத்தை மையப்படுத்தி உரையாற்றினார்.
இயேசுவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழா சமயத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுவது இறைபராமரிப்பு என்றே சொல்ல வேண்டும் எனவும், கிறிஸ்துவின் பிரசன்னத்தில் எம்மாவுஸ் சீடர்களின் வாடிநவு சுடர்விட்டது போன்று, இளையோரும், இன்று, இருளான உலகில் ஒளியாகத் திகழ அழைக்கப் பட்டுள்ளனர் எனவும் திருத்தந்தை கூறினார்.
நாம் மற்றவரை எந்த அளவுக்கு ஆண்டவரிடம் கொண்டு வருகிறோமோ, அந்த அளவுக்கு, நம் வாழ்வில் அவரின் பிரசன்னத்தை உணர்வோம் என்றும், கடவுளின் ’இன்றையப் பொழுது நீங்களே, திருஅவையின் இன்றையப் பொழுதும் நீங்களே’ என்றும், திருஅவைக்கு நீங்கள் தேவைப்படுகின்றீர்கள் என்றும், இளையோரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

Comment