No icon

திருத்தந்தையை வேதனைக்கு உட்படுத்திய செய்தி

மெக்சிகோ நாட்டிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டை அடைவதற்கு, நதி வழியேசெல்ல முயன்ற ஓர் இளம் தந்தையும், அவரது மகளும், நீரில் மூழ்கி
இறந்த செய்தி, திருத்தந்தையை மிகவும் வேதனைக்கு உள்ளாக்
கியது என்று, வத்திக்கான் செய்தித் துறைத் தலைவர், அலெஸ்சாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள், ஜூன் 26 ஆம் தேதி  செய்தியாளர் களிடம் கூறினார்.
ரியோ கிராந்தே (சுiடி ழுசயனேந) என்ற நதியில் மூழ்கி, கரையோரம் ஒதுங்கியிருந்த தந்தை மற்றும் அவரது பெண்
குழந்தை ஆகிய இருவரின் படம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை மிகுந்த வேதனையில்
நிறைத்தது என்றும், அவ்விரு
வருக்காகவும், அதே வண்ணம், போர், மற்றும் ஏனைய கொடுமை
களிலிருந்து தப்பித்துச் செல்லும்
வழியில் உயிரிழந்த அனைவருக் காகவும், தான் இறைவேண்டல் செய்து வருவதாக திருத்தந்தை கூறினார் என்றும் ஜிசோத்தி அவர்கள் கூறினார்.
எல் சால்வதோர் நாட்டைச்
சேர்ந்த 25 வயதான ஆஸ்கர் அல்பெர்த்தோ மார்த்தினேஸ் ரமீரெஸ் அவர்களும், அவரது
23 மாத பெண் குழந்தை வலேரியாவும், மெக்சிகோவி லிருந்து, ரியோ கிராந்தே நதி வழியே அமெரிக்க ஐக்கிய நாட்டை அடைய முயன்ற வேளை யில், இருவரும் வெள்ளத்தில் சிக்கி, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Comment